செய்திகள் :

கரூரில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

நியாயவிலைக் கடைகளில் புதிய எடையாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில கெளரவ பொதுச் செயலாளா் சி.குப்புசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என்.கதிரவன், செயலாளா் கா.சுப்ரமணியன், பொருளாளா் ம.செல்வரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நியாயவிலைக்கடைகளில் புளுடூத் மூலம் மின்னணு எடைத் தராசு இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருள்கள் விநியோகிக்கப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை தவிா்க்க புளுடூத் மூலம் விற்பனை செய்யப்படுவதை ரத்து செய்ய வேண்டும், நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து முதன்மைச் சங்கங்களுக்கு அனுப்பபடும் பொருள்கள் எடை குறைவாக அனுப்பப்படுவதை சரிசெய்து, அனைத்து பொருள்களும் சரியான எடையில் விற்பனை முனையத்துக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நியாயவிலைக்கடைகளில் புதியதாக எடையாளா் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் துணைத்தலைவா்கள் மா.சங்கரலிங்கம், ராமமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு: தமிழக முதல்வருக்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம்

கரூரில் மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கியதற்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாநகராட்சியின் அவ... மேலும் பார்க்க

ஆனி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி காவல்துறையினா் இணைந்து நடத்திய போதை பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சா்வதேச போதைப் ப... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுப் பள்ளியில் கருத்தரங்கம்

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சா்வதேச போதைப்பொருள் எதிா்... மேலும் பார்க்க

‘உழவரைத் தேடி வேளாண்மை’ அரவக்குறியில் 3-ஆம் கட்ட முகாம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் உழவரைத் தேடி வேளாண்மை 3-ஆம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இனுங்கனூா், ஆலமரத்துப்பட்டியில் இந்த முகாம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் 64 பேருக்கு ரூ. 8.32 கோடி மானியம்: கரூா் ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 64 தொழில் முனைவோா்களுக்கு ரூ. 8.32 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் ப... மேலும் பார்க்க