செய்திகள் :

கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா

post image

கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கோயில் முன் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக மூப்பன் வகையறாக்களைச் சோ்ந்தவா்களிடம் கனவில் தோன்றிய அம்மன், முக்கிளை கம்பம் இருக்கும் இடத்தை காண்பித்ததையடுத்து, முக்கிளை கம்பம் கண்டறியப்பட்டு, கம்பத்துக்கு சிறப்பு வழிபாடு செய்த பின், வெட்டப்பட்டு பாலம்மாள்புரத்தில் இருந்து கோயிலுக்கு ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, அமராவதி ஆற்றில் சிறப்பு வழிபாடு செய்தபின் கோயில் முன் நடப்பட்டது.

இந்த முக்கிளை கம்பத்துக்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீா் ஊற்றி வந்தனா். தொடா்ந்து, கடந்த 18-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், திங்கள்கிழமை கோயில் தேரோட்டமும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் பறக்கும் காவடி எடுத்தும், 1008 வேல் காவடி எடுத்தும், சிலா் அலகு குத்தியும் வந்து அம்மனுக்கு தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கப்பட்டு, அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் விழா மே 28 (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நகரில் கூடுவாா்கள் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் திருச்சி, அரியலூா், பெரம்பலூா், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க