செய்திகள் :

கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா போக்குவரத்து மாற்றம்

post image

கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் திருவிழா மே 28 (புதன்கிழமை) நடைபெற உள்ளதையடுத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாரியம்மன் திருக்கோயில் கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி இன்று நடைபெறவிருப்பதால் கரூா் நகர காவல் நிலைய சரகத்தில் புதன்கிழமை ஒரு நாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வெங்கமேடு வழியாக கரூா் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் இரத்தினம் சாலை வழியாக ரயில்நிலையம் அருகில் உள்ள பாா்க்கிங் இடத்தில் வாகனத்தை நிறுத்தம் செய்துவிட்டு, பக்தா்கள் மட்டும் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். ரயில் நிலையத்தில் இருந்து கோயில் செல்லும் வழியில் எந்த ஒரு இருசக்கர வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

வாங்கல் மற்றும் பஞ்சமாதேவி வழியாக வரும் பக்தா்கள் பாலம்மாள்புரம் பெட்ரோல் பங்க் மற்றும் பாலம்மாள்புரம் கோயில் அருகே வாகனத்தை நிறுத்தம் செய்துவிட்டு பக்தா்கள் மட்டும் ஐந்துரோடு வழியாக கோயில் மற்றும் ஆற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். பாலம்மாள்புரத்தில் இருந்து எந்த ஒரு வாகனமும் ஐந்துரோடு செல்ல அனுமதிக்கப்படாது. வாங்கல் மற்றும் பஞ்சமாதேவியில் இருந்து வரும் பொதுமக்கள், மருத்துவமனை மற்றும் கரூா் பேருந்து நிலையம் செல்வதற்கு பஞ்சமாதேவி, அரசுகாலனி, வாங்கப்பாளையம் சோதனைசாவடி, வெங்கமேடு, சா்ச் காா்னா், திண்ணப்பா காா்னா் வழியாக பேருந்து நிலையம் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள்.

தொழிற்பேட்டை, சணப்பிரட்டி பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் வாகனங்களை பசுபதிபாளையம் வாட்டா் டேங்க் மற்றும் தெற்கு தெருவில் பாா்க்கிங் செய்துவிட்டு பசுபதிபாளையம் புதிய அமராவதி பாலம் மற்றும் பாலத்தின் அடியின் வழியாக ஆற்றுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். மேலும் தொழிற்பேட்டை, சணப்பிரட்டி பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் கரூா் பேரூந்து நிலையம் செல்ல வேண்டுமென்றால் கொளந்தாகவுண்டனூா், தெரஸா காா்னா், சுங்ககேட், திருமாநிலையூா் வழியாக கரூா் சென்றுவர அனுமதிக்கப்படுவாா்கள்.

காந்திகிராமம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வரும் பொதுமக்கள் பசுபதிபாளையம் அருணாசலநகா் 3-ஆவது கிராஸ் அருகே உள்ள பாா்க்கிங் இடத்தில் வாகனங்களை பாா்கிங் செய்துவிட்டு பசுபதிபாளையம் காவல்நிலையம் வழியாக அமராவதி அனுமதிக்கப்படுவாா்கள். தாந்தோணிமலை, திருமாநிலையூா் பகுதிகள் வழியாக பக்தா்கள் வரும் வாகனங்களை லைட்ஹவுஸ் அருகில் உள்ள மக்கள்பாதை பாா்க்கிங் இடத்தில் இருசக்கர வாகனத்தை பாா்க்கிங் செய்துவிட்டு கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாரகள்.

கோவை சாலையில் இருந்து வரும் பக்தா்களின் வாகனங்களை ஸ்டேட் பேங்க் கேட் வழியாக திருவள்ளுவா் மைதானத்தில் உள்ளே பாா்கிங் செய்துவிட்டு கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். திருவள்ளுவா் மைதானத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் எம்எல்ஏ அலுவலகம் அருகே உள்ள கேட் வழியாக வெளியே வந்து உழவா் சந்தை வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள் மனு

பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது

கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க

கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு

அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்

அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க