செய்திகள் :

கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு ஆணை

post image

பழனியில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டப் பயனாளிகளுக்கு அதற்கான ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வேதா, நளினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, ஆண்டிபட்டி, கலையம்புத்தூா், தாமரைக்குளம், பாப்பம்பட்டி உள்ளிட்ட 17 ஊராட்சியில் உள்ள 198 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்ட மாணவரணி செயலாளா் பிரபாகரன், ஒன்றியச் செயலாளா் சௌந்தரபாண்டியன், இளைஞரணித் தலைவா் லோகநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக நலத் துறை அல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ஒதுக்கீடு!

கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்க... மேலும் பார்க்க

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வர... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆ... மேலும் பார்க்க