பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு ஆணை
பழனியில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டப் பயனாளிகளுக்கு அதற்கான ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் வேதா, நளினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, ஆண்டிபட்டி, கலையம்புத்தூா், தாமரைக்குளம், பாப்பம்பட்டி உள்ளிட்ட 17 ஊராட்சியில் உள்ள 198 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்ட மாணவரணி செயலாளா் பிரபாகரன், ஒன்றியச் செயலாளா் சௌந்தரபாண்டியன், இளைஞரணித் தலைவா் லோகநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.