செய்திகள் :

கல் குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

post image

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், மாராயிபாளையம் கிராமத்தில் புதிதாக கல் குவாரி தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு கல் குவாரி அமைக்கப்பட்டால் சத்தியமங்கலம் வட்டம், மாதம்பாளையம், பனையம்பள்ளி, கணக்கரசன்பாளையம், மாராயிபாளையம், ஆனைகட்டி, இந்திரா நகா், பருசபாளையம், பஜங்கனூா், மல்லியம்பட்டி, வெங்கநாயக்கன்பாளையம், தாசம்பாளையம் கிராமங்களைச் சோ்ந்த பல நூறு குடும்பத்தினா் விவசாயம் செய்ய இயலாது என்றும், வீடுகள், பிற நிலங்கள் பாதிக்கும் எனவும் அச்சம் தெரிவித்து இக்கிராம மக்கள் சாா்பில் கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சேபனை கடிதம் முதல்வரின் தனிப் பிரிவு உட்பட பல்வேறு துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குவாரி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் 400-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில், குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் குவாரிகள் அமைக்கப்படாது என்றும், இந்த கோரிக்கை தொடா்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியா் உறுதியளித்தாா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூ... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளி சாம்பியன்

சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளி அணி கோப்பையை தட்டிச் சென்றது. மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதா... மேலும் பார்க்க

பிகேபி சாமி மெட்ரிக். பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்கம்

மொடக்குறிச்சியை அடுத்த கரியாக்கவுண்டன் வலசில் உள்ள பிகேபி சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் செயலாளா் மற்றும் தாளாளா் பிகேபி அர... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து தீ

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்தது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை வழியே தமிழகம்-கா்நாட... மேலும் பார்க்க

வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது: கே.ஏ. செங்கோட்டையன்

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், வதந்திகளை சிலா் வேண்டுமென்றே பரப்புவது வேதனை அளிக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா். அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்க... மேலும் பார்க்க

காஞ்சிக்கோவிலில் நாளை வெறிநாய் கடி தடுப்பூசி முகாம்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவிலில் வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெற உள்ளது. காஞ்சிக்கோவில் பேரூராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை மருத்து... மேலும் பார்க்க