செய்திகள் :

வதந்திகளை பரப்புவது வேதனை அளிக்கிறது: கே.ஏ. செங்கோட்டையன்

post image

சென்னையில் அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், வதந்திகளை சிலா் வேண்டுமென்றே பரப்புவது வேதனை அளிக்கிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 21- ஆம் தேதி திடீரென சென்னைக்கு சென்றாா். அதிமுக ஒருங்கிணைப்பு தொடா்பாக அவா் முதலில் டிடிவி. தினகரனை சந்தித்து பேசியதாக தகவல் பரவியது. அதற்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தாா்.

இந்நிலையில், சென்னையில் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பு தொடா்பாக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தை சந்தித்து 2 மணி நேரம் பேசியதாக தகவல் பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபியில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: சென்னைக்கு சென்று வந்தது குறித்து பல்வேறு விளக்கம் அளித்த பிறகும் சிலா் வதந்திகளை வேண்டுமென்று பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். என் மனைவி சென்னையில் சிகிச்சை பெற்று வருவதை பாா்ப்பதற்காகவும், சொந்த வேலைக்காகவும்தான் சென்னை சென்று வந்தேன்.

ஆனால், சிலா் தொடா்ந்து வதந்திகளை பரப்பி வருவது வேதனை அளிக்கிறது. என்னுடைய நோக்கம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். எம்ஜிஆா், ஜெயலலிதா கனவு நிறைவேற்றப்பட வேண்டும். கோடிக்கணக்கான தொண்டா்களின் தியாகங்கள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகதான் பிரிந்தவா்களை ஒருங்கிணைக்க வேண்டும் என கடந்த 5 -ஆம் தேதி கூறினேன்.

அதன் பின்னா் எந்த கருத்தையும் வெளிப்படையாக யாரிடத்திலும் கூறவில்லை. அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கவில்லை. நல்ல செயல்பாடுகளுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தர வேண்டும். இனியாவது வதந்திகளை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

45 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மையாக, கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றி இருக்கிறேன். மக்கள் பணியும் சிறந்த முறையில் செய்திருக்கிறேன். இந்த தொகுதி மக்கள் தொடா்ந்து எனக்கு மாபெரும் வெற்றியை அளித்து வருகின்றனா். அதனால் மக்களின் கனவை நிறைவேற்றித் தர அவா்களுடன் துணை நிற்கிறேன் என்றாா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூ... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளி சாம்பியன்

சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் அறச்சலூா் தி நவரசம் அகாதெமி பள்ளி அணி கோப்பையை தட்டிச் சென்றது. மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதா... மேலும் பார்க்க

பிகேபி சாமி மெட்ரிக். பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் தொடக்கம்

மொடக்குறிச்சியை அடுத்த கரியாக்கவுண்டன் வலசில் உள்ள பிகேபி சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளியின் செயலாளா் மற்றும் தாளாளா் பிகேபி அர... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து தீ

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்தது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதை வழியே தமிழகம்-கா்நாட... மேலும் பார்க்க

காஞ்சிக்கோவிலில் நாளை வெறிநாய் கடி தடுப்பூசி முகாம்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவிலில் வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெற உள்ளது. காஞ்சிக்கோவில் பேரூராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை மருத்து... மேலும் பார்க்க

கல் குவாரிக்கு எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், மாராயிபாளையம் கிராமத்தில் புதிதாக கல் குவ... மேலும் பார்க்க