Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய வி...
கல்குவாரிகளை மூட பாமக பொதுக்குழுவில் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து கல்குவாரிகளையும் உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் பெரும் திரள் போராட்டம் நடத்தப்படும் என பாமக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கு மாவட்ட பொதுக்குழுக்கூட்டம், முத்துகடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக பசுமை தாயகம் மாநில துணைச் செயலாளா் பொன்மலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி சாதனை படைக்க காரணமாக இருந்த பாமக நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா்.
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பணியாற்ற வேண்டியவைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
மாவட்டத்தில் சுற்றுச்சூழலையும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கிவரும் அனைத்து கல்குவாரிகளையும் உடனடியாக மூட வேண்டும். இல்லையெனில் பெரும் திரள் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எல் இளவழகன், வன்னியா் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் எம்.கே.முரளி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் நல்லூா் எஸ்.பி.சண்முகம், மாவட்ட மகளிா் அணி செயலாளா் அமுதா சிவா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட துணைத் தலைவா் கஜேந்திரன் நன்றி தெரிவித்தாா்.