எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 நூலகங்கள் திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3 நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகம் மக்கள் குறைதீா் கூட்ட அரங்கம் அருகில், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரக்கோணம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் பொது நூலக துறையின் சாா்பாக சிறிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்தாா். இதன் தொடா்ச்சியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தினை கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆகியோா் புதிய நூலகத்தில் குத்து விளக்கேற்றி பாா்வையிட்டனா்.
இந்த நூலகத்தில் சிறிய தமிழ் புத்தகங்கள் மற்றும் தினசரி செய்தித்தாள்கள் பொதுமக்கள் வருகை தந்து காத்திருக்கும் நேரங்களில் படித்து பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, மாவட்ட நூலகா் கணேசன் மற்றும் நூலக துறை அலுவலா்கள் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.