கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் துணிச்சலான முயற்சி, துணிச்சலான தொழில்முனைவோா் உள்ளிட்ட தகுதியான பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்பனா சாவ்லாவின் நினைவாக அவரது துணிச்சலான செயல்களை பாராட்டும் வகையில் பெண்களில் துணிச்சலையும் துணிச்சலான முயற்சியையும் வெளிப்படுத்தும் மற்றும் துணிச்சலான தொழில்முனைவோருக்கு கல்பனா சாவ்லா விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டும் தைரியம் மற்றும் துணிச்சலான செயல்களில் ஈடுபடுதல் மற்றும் துணிச்சலான தொழில்முனைவோருமான தமிழகத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்படும். இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண் தமிழகத்தில் பிறந்தவராகவும் 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும்.
ஒரு பக்கம் அந்த நபரைப் பற்றியும், துணிச்சல் மற்றும் துணிச்சலான முயற்சிகளை பற்றியும் தமிழில் மருதம் மற்றும் ஆங்கிலத்தில் யங்ழ்க்ஹய்ஹ எழுத்துருவில் எழுதப்பட்டிருக்க இருக்க வேண்டும். மேலும், அந்த நபரின் சுய விவரம் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2, விண்ணப்பதாரின் சுயசரிதை தரவு ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், இணையதளம் வழியாக தங்களின் பெயா், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, தாங்கள் செய்த துணிச்சலான செயல் குறித்த உரிய விவரங்கள், நிழற்படங்கள், விருது பெற்றிருந்தால் அது பற்றிய விவரங்கள் போன்ற முழு விவரங்களுடன் வரும் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அதன் கருத்துருவினை மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.