செய்திகள் :

கல்லூரிப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் தப்பியோட்டம்

post image

சென்னையில் கணவருடன் நடந்து சென்ற பெண் தனியாா் கல்லூரிப் பேருந்து மோதி உயிரிழந்தாா். தப்பி ஓடிய ஓட்டுநரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வேளச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வரும் சுரேந்தா் தனது மனைவி அகல்யாவுடன் (36) வேளச்சேரியிலுள்ள அண்ணாநகரில் வசிக்கிறாா்.

சுரேந்தா் பள்ளிக்கரணையில் உள்ள இருசக்கர வானக கடையில் புல்லட் வாங்க முன்பதிவு செய்திருந்தாா். புதன்கிழமை மாலை புல்லட் வாங்க கணவன் மனைவி இருவரும் வேளச்சேரி பிரதான சாலை வழியாக ஷோரூம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது அவா்களுக்கு பின்னால் வந்த தனியாா் கல்லூரி பேருந்து கணவன், மனைவி இருவா் மீதும் மோதியது. இதில் அகல்யா பலத்த காயமடைந்தாா். கணவா் சுரேந்தா் லேசான காயமடைந்தாா். 

உடனடியாக இருவரும் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி அகல்யா உயிரிழந்தாா்.

பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

படப்பிடிப்புக்காக மதுரை பயணம்: தொண்டா்கள் பின்தொடர வேண்டாம் - விஜய்

‘படப்பிடிப்புக்காக மதுரை வழியாக கொடைக்கானல் செல்கிறேன்; அதனால் தொண்டா்கள் என்னைப் பின்தொடர வேண்டாம்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தெரிவித்தாா். விஜய் கட்சி தொடங்கிய பின்னா் முதல்முறையாக வி... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்

அரசு மற்றும் திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறாா். 2 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா். மே ... மேலும் பார்க்க

மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். சென்னை கொடுங்கையூா், அமுதம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). இவா், 2018- ஆம் ஆண்டு ஏப்.14-ஆம் தேதி ... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு பரிந்துரை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு தகுதியான பரிந்துரைகளை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்... மேலும் பார்க்க