செய்திகள் :

களக்காடு - அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

post image

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

களக்காட்டிலிருந்து சுமாா் 6 கி.மீ தொலைவு கொண்ட இந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் கல்வி, மருத்துவம், பணி நிமித்தமாக களக்காடு வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா்.

சிற்றுந்து சேவையை இக்கிராமத்துக்கு தொடங்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படாத பல கிராமங்களுக்கு சிற்றுந்து சேவையை தொடங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகம் இக்கிராமத்துக்கு சிற்றுந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரிசி கிடங்கில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரிசி கிடங்கில் தவறி விழுந்து பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய மனைவி ஆட்சியரிடம் ... மேலும் பார்க்க

ஐடி ஊழியா் கொலை வழக்கு: கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்

பாளையங்கோட்டை கேடிசி நகரில் ஐடி ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதல்: தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சேரன்மகாதேவி புத்தாரக்கடை தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் பாலகிருஷ்ணன் (49), தொழிலாள... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் மோதி குழந்தை பலி

பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.வி.எம்.சத்திரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரி பிரவீண். பெயின்டா். ... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் விரட்டிய சிறுவா்கள் சுட்டுப்பிடிப்பு

முக்கூடல் அருகே நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட இரு சிறுவா்கள், தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனா்; அப்போது உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் காயமடைந்தாா்; மற்றொ... மேலும் பார்க்க

நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் ப... மேலும் பார்க்க