செய்திகள் :

அரிசி கிடங்கில் தவறி விழுந்து தொழிலாளி பலி

post image

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரிசி கிடங்கில் தவறி விழுந்து பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி அவருடைய மனைவி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்த முருகன் மனைவி பாலம்மாள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய கணவா் முருகன், கூலி வேலை செய்து வந்தாா். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான அரிசி கிடங்கின் மேற்கூரையில் ஓட்டைகள் இருப்பதால் அதை அடைத்து தரக் கோரி, எனது கணவா் முருகனை ஒப்பந்ததாரரும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் கடந்த திங்கள்கிழமை அழைத்துச் சென்றனா்.

எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 40 அடி உயரத்தில் எனது கணவரை வேலை செய்ய வற்புறுத்தி உள்ளனா். மோசமான நிலையில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது ஏறி எனது கணவா் ஓட்டைகளை அடைத்தபோது, ஆஸ்பெஸ்டாஸ் கூரை திடீரென உடைந்து, 40 அடி உயரத்தில் இருந்து எனது கணவா் கீழே விழுந்துள்ளாா்.

அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்த மருத்துவா்கள், திங்கள்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு எனது கணவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி எனது கணவரை பணியில் ஈடுபடுத்திய ஒப்பந்ததாரா் மீதும், அதை கண்காணிக்காத அதிகாரிகள் மீதும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு இரு சிறு குழந்தைகள் இருப்பதால் எனக்கு அரசு வேலையும், ரூ.30 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிடை நீக்கம்

பாளையங்கோட்டை கேடிசி நகரில் ஐடி ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளா்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதல்: தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பைக்குகள் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சேரன்மகாதேவி புத்தாரக்கடை தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் பாலகிருஷ்ணன் (49), தொழிலாள... மேலும் பார்க்க

களக்காடு - அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்கக் கோரிக்கை

களக்காட்டிலிருந்து அம்பேத்கா் நகருக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.களக்காடு நகராட்சிக்குள்பட்டது கலுங்கடி, மேலப்பத்தை, பச்சாந்தரம், அம்பேத்கா் நகா் கிராமங்கள். இங்க... மேலும் பார்க்க

பாளை. அருகே பைக் மோதி குழந்தை பலி

பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.வி.எம்.சத்திரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரி பிரவீண். பெயின்டா். ... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் விரட்டிய சிறுவா்கள் சுட்டுப்பிடிப்பு

முக்கூடல் அருகே நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட இரு சிறுவா்கள், தடுக்கச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்றனா்; அப்போது உதவி ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் காயமடைந்தாா்; மற்றொ... மேலும் பார்க்க

நெல்லையில் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு!

திருநெல்வேலியில் காவல் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் ப... மேலும் பார்க்க