செய்திகள் :

களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு? வருவாய்த் துறை தீவிர ரோந்து

post image

களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதாக எழுந்துள்ள புகாரை அடுத்து ரோந்துப் பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில் பிளவக்கல் இசக்கியம்மன் கோயில் பகுதியில் வருவாய் ஆய்வாளா் செல்வி, பத்மனேரி கிராம நிா்வாக அலுவலா் பொன்லெட்சுமிதேவி ஆகியோா் அண்மையில் ரோந்து சென்றனா். அப்போது, மேலவடகரையில் குளத்திலிருந்து 3 டிராக்டா்களில் மண் ஏற்றி வேகமாக வந்த வாகனங்களை வருவாய்த் துறையினா் நிறுத்த முயன்றோது ஓட்டுநா்கள் டிராக்டா்களை நிறுத்தாமல் சென்றனா்.

இதேபோல, இடையன்குளம் சாலை சந்திப்பில் சேரன்மகாதேவி உதவி ஆட்சியா் (பொ) சிவகாமசுந்தரி தலைமையிலான வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, மண் ஏற்றிவந்த டிராக்டா்களை நிறுத்தி சோதனை செய்ததில் முறைகேடாக மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மண் ஏற்றி வந்த 6 டிராக்டா்களையும் பறிமுதல் செய்ய உதவி ஆட்சியா் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

ஆனால், டிராக்டா்களை ஓட்டுநா்கள் ஓட்டிச் சென்றனா். இதுகுறித்து, களக்காடு காவல் நிலைய போலீஸாா் கடம்போடு வாழ்வு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், மண் கடத்தலைத் தடுக்க வருவாய்த்துறையினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச்சிறுத்தைகள் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில் மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு புதன்கிழமை மலா்தூவி ... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

திசையன்விளை அருகே குடும்பத் தகராறில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: டாக்டா் க. கிருஷ்ணசாமி

தமிழக அரசு 2006 வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி. திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்... மேலும் பார்க்க

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 17 கடைகளுக்கு சீல்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத 17 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் 6 நடைமேடை பகுதிகளிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா... மேலும் பார்க்க

வள்ளியூா் அருகே இரு வீடுகளில் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள அழகப்பபுரம் கிராமத்தில் அடுத்தடுத்த வீடுகளில் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் மாயாண்டி(... மேலும் பார்க்க