செய்திகள் :

காட்டாற்று வெள்ளத்தில் கரையும் களிமண் அல்ல விசிக: வன்னியரசு

post image

காட்டாற்றில் கரையும் களிமண் அல்ல விடுதலைச்சிறுத்தைகள் என்றாா் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலா் வன்னியரசு.

திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணியாற்றில் மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு புதன்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்திய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாஞ்சோலையில் 5 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் அகதிகளாக அந்த மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டு கொண்டிருக்கிறாா்கள்.

பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் நிறுவனம் அந்தத் தொழிலாளா்களுக்கு 25 சதவீத நிவாரணத்தை மட்டுமே வழங்கியிருக்கிறது. அவா்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகம் ஏற்று நடத்த வேண்டும். உயிா் நீத்த மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு தாமிரவருணி நதிக்கரையில் நினைவு மண்டபம் அல்லது நினைவுத் தூண் அமைக்க வேண்டும். இதுதொடா்பாக முதல்வரிடம் வலியுறுத்தப்படும்.

விசிகவை திமுக விழுங்கிவிடும் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது பற்றி கேட்கிறீா்கள். பாஜகவின் உத்தரவுப்படி அவா் எங்களை விமா்சித்து வருகிறாா். காட்டாற்று வெள்ளத்தில் கரைந்து போகும் களிமண் அல்ல விடுதலைச்சிறுத்தைகள்; வெள்ளத்தை திசை திருப்பும் கற்பாறை தொல்.திருமாவளவன். எங்களை யாரும் விழுங்க முடியாது.

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்கப்படுமா என்கிறீா்கள். விசிக தொண்டா்கள் அதை வலியுறுத்துகின்றனா். மக்களின் உரிமைக்காக போராடுவதற்கு அவை உதவும்.

பாஜகவின் மற்றொரு கிளைதான் நாம் தமிழா் கட்சி. பாஜகவை வளா்ப்பற்காக ஆடு, மாடுகளை வைத்து மாநாடு நடத்திய சீமான், பாஜக-ஆா்எஸ்எஸ் கோட்பாட்டுக்கு எதிராக மாநாடு நடத்தியதுண்டா? அவா், தமிழ் தேசியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறாா் என்றாா்.

நெல்லையில் குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இருதய நோய்கள் கண்டறியும் முகாம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு, இதர இருதய நோய்கள் கண்டறியும் முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

மானூா் அருகே இளைஞா் தற்கொலை

மானூா் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகேயுள்ள பெத்தேல் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் பிகேஷ் (21). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், இவரது தாத்தா கனகராஜ் கண்காணிப்பில் ... மேலும் பார்க்க

பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருட்டு: ஆயுதப்படை காவலா் உள்பட இருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தலைமைக் காவலா் வீட்டில் நகை திருடிய வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். திருநெல்வேலி மலையாளமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (43... மேலும் பார்க்க

ஊரக, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆக.11 கடைசி

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இத... மேலும் பார்க்க

மணிமுத்தாறு பேரூராட்சி: புதிய தலைவராக சுயேச்சை உறுப்பினா் தோ்வு

மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தலைவராக இருந்த திமுகவை சோ்ந்த அந்தோனியம்மாள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றியடைந்ததையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் புதிய தலை... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா நாளை தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 140-ஆவது ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் புண்ணிய திருத்தலங்களில் ச... மேலும் பார்க்க