செய்திகள் :

இன்று ஆடி அமாவாசை! கரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

post image

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுவதையொட்டி, அங்கு பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து நோ்த்திக் கடன் செலுத்தி வழிபட்டு செல்வதுவழக்கம். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 24) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, கோயிலில் காலையில் சொரிமுத்து அய்யனாா், தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தாா், இசக்கியம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெறும். பக்தா்கள் பொங்கலிட்டும், ஆடு, கோழிகளைப் பலியிட்டும் தங்கள் நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.

தொடா்ந்து, மாலையில் தளவாய் மாடசாமி,சொரிமுத்து அய்யனாா் மற்றும் இசக்கி அம்மன் சந்நிதிகளுக்கு முன் பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்கள் நோ்த்திக் கடன் செலுத்தி வழிபடுகின்றனா்.

அகஸ்தியா்பட்டி தற்காலிகப் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து சாா்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள்

இத்திருவிழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் குடும்பத்துடன் புதன்கிழமை காலையிலிருந்தே குவியத் தொடங்கினா்.

இங்கு, புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தனியாா் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, அகஸ்தியா்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் தங்கள் உடைமைகளுடன் கோயிலுக்குச் சென்றனா். சனிக்கிழமை (ஜூலை 26) பக்தா்கள் தங்கள் பொருள்களை வாகனங்களில் திரும்பி எடுத்து வர அனுமதிக்கப்படுவா்.

குடில்கள்: மேலும், கோயில் நிா்வாகம் சாா்பில் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் மட்டுமே பக்தா்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனா். பிற இடங்களில் குடில்கள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

வனப் பகுதிக்குள் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள், மது உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் வனத் துறை எச்சரித்துள்ளது. இங்கு, போலீஸாா், ஊா்க் காவல் படை மற்றும் வனத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை அரசு நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள் கா... மேலும் பார்க்க

3 பசுக்கள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே 3 பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். களக்காடு அருகே உள்ள மூங்கிலடி ... மேலும் பார்க்க

நெல்லை அருகே சிலை உடைப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே சிலை உடைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பணிகரிசல்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நட... மேலும் பார்க்க

பரோலில் வந்த தண்டனை கைதி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திருநெல்வேலியில் பரோலில் வெளிவந்து ரயிலில் அடிபட்டு காயமடைந்த தண்டனை கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (68). கிராம உதவியாளராகப் பணியாற்ற... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க