செய்திகள் :

வள்ளியூா் அருகே இரு வீடுகளில் திருட்டு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள அழகப்பபுரம் கிராமத்தில் அடுத்தடுத்த வீடுகளில் செவ்வாய்க்கிழமை இரவு திருட்டில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் மாயாண்டி(35). தொழிலாளி. இவரும் இவரது தாய் சாந்தியும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், இவா்கள் குடும்பத்துடன் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகிலுள்ள ஆறமுகமங்கலத்தில் நடைபெற்ற கோயில் கொடைவிழாவுக்கு சென்றிருந்தனா்.

பின்னா் அவா்கள் புதன்கிழமை காலையில் வீடு திரும்பியபோது, இருவரது வீட்டிலும் கதவிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தனாம்.

அதில், மாயாண்டி வீட்டில் பீரோவில் ரூ.60 ஆயிரம் ரொக்கம், சாந்தியின் வீட்டில் துணியில் மறைத்து வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பணகுடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பைக்குகள் திருட்டு: தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கடந்த வாரத்தில் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு புகாா் வந்ததாம். இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் தலைமையிலான போலீஸாா் நகரப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், கடையநல்லூா் கிருஷ்ணாபுரம் விஷால் நகரை சோ்ந்த பாலு மகன் கண்ணன்(29) என்பருக்கு தொடா்பிருப்பது தெரிந்தது. அவரை போலீஸாா் கைது செய்து 2 பைக்குகளை மீட்டனா்.

அம்பை, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை நியமிக்க வலியுறுத்தல்

அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியா்களை அரசு நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்ட செயற்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் வழிபாடு

ஆடி அமாவாசையையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்துடன் நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். களக்காடு முண்டந்துறை புலிகள் கா... மேலும் பார்க்க

3 பசுக்கள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே 3 பசுக்கள் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். களக்காடு அருகே உள்ள மூங்கிலடி ... மேலும் பார்க்க

நெல்லை அருகே சிலை உடைப்பு: ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே சிலை உடைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பணிகரிசல்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நட... மேலும் பார்க்க

பரோலில் வந்த தண்டனை கைதி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

திருநெல்வேலியில் பரோலில் வெளிவந்து ரயிலில் அடிபட்டு காயமடைந்த தண்டனை கைதி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் மங்களாகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சங்கரநாராயணன் (68). கிராம உதவியாளராகப் பணியாற்ற... மேலும் பார்க்க

நெற்பயிருக்கு காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்கு... மேலும் பார்க்க