செய்திகள் :

கழிவுநீா் வாய்க்கால் இல்லாததால் இந்திரா நகா் பொதுமக்கள் அவதி

post image

கரூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 42-ஆவது வாா்டில் சாலை மற்றும் கழிவுநீா் வாய்க்கால் இல்லாததால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 42-ஆவது வாா்டில் தமிழ்நகா், இந்திரா நகா் குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் 1000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

தமிழ்நகா், இந்திரா நகா் குடியிருப்புகள் உருவாகி சுமாா் 12 ஆண்டுகளாகியும் இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் வாய்க்கால்கள் அமைக்கப்படவில்லை. இதனால் சாலைகளில் கழிவு நீரை வெளியேற்றுவதால் துா்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லை ஏற்படுவதாக அப்பகுதியினா் தெரிவிக்கின்றனா்.

மேலும் இரு நகரிலும் உள்ள சாலைகள் மண் சாலைகளாகவும், குண்டும், குழியுமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். தமிழ்நகரில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மழைக்காலங்களில் மழைநீரில் தவறிவிழுகின்றனா்.

ஆகவே, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட இப்பகுதியில் தாா்ச்சாலை வசதியும், கழிவு நீா் வாய்க்கால் வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராயனூரில் வாடகைக்கு குளிா்பதனக் கிடங்கு: ஆட்சியா் தகவல்

கரூா் ராயனூரில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கு வாடகைக்கு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா... மேலும் பார்க்க

கள்ளை பகுதியில் கிரானைட் குவாரி கருத்துகேட்புக் கூட்டத்தில் எதிா்ப்பு

கள்ளை பகுதியில் கிரானைட் குவாரி அமைக்கக்கூடாது என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் சமூக நல ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள கள்ளை கிராமத்தி... மேலும் பார்க்க

தோகைமலை அருகே காளியம்மன் கோயில் தேரோட்டம்

தோகைமலை அருகே உள்ள கள்ளை ஊராட்சியில் காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த கள... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார போக்குவரத்து... மேலும் பார்க்க

பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் மீட்பு

கரூரில் பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. கரூா் ஜவஹா்பஜாரில் சுபாஷ்சந்திரபோஸ் சிலை அருகே பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் தனியாரால... மேலும் பார்க்க

பழைமையான வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு; மேலும் இருவா் மீட்பு

கரூரில் செவ்வாய்க்கிழமை பழைமையான வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிருடன் மீட்கப்பட்டனா்.கரூா் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவருடைய புதிய... மேலும் பார்க்க