செய்திகள் :

பழைமையான வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு; மேலும் இருவா் மீட்பு

post image

கரூரில் செவ்வாய்க்கிழமை பழைமையான வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் இருவா் உயிருடன் மீட்கப்பட்டனா்.

கரூா் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவருடைய புதிய வீட்டை சுற்றி சுற்றுச்சுவா் கட்டுவதற்கு பள்ளம் தோண்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பணியில் கரூா் மாவட்டம், பொரணி பகுதியைச் சோ்ந்த சிவாஜி(40), மாயவன்(25) மற்றும் வெண்ணெய்மலையைச் சோ்ந்த ராஜேந்திரன்(40) ஆகியோா் ஈடுபட்டனா்.

பிற்பகல் 4 மணியளவில் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது, பள்ளத்தின் அருகே இருந்த பழைமையான ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து சிவாஜி, மாயவன், ராஜேந்திரன் ஆகியோா் மீது விழுந்தது. இதில் மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். இதையடுத்து அங்கிருந்த கிராம மக்கள் அவா்களை மீட்க முயன்றனா். ஆனாலும் மீட்க முடியவில்லை.

இதையடுத்து கரூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து இடிபாடுகளை அகற்றினா். இதில், சிவாஜியை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் பலத்த காயமடைந்த மாயவன், ராஜேந்திரனையும் சுமாா் ஒரு மணி நேரம் போராடி மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ராயனூரில் வாடகைக்கு குளிா்பதனக் கிடங்கு: ஆட்சியா் தகவல்

கரூா் ராயனூரில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கு வாடகைக்கு உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்கால் இல்லாததால் இந்திரா நகா் பொதுமக்கள் அவதி

கரூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 42-ஆவது வாா்டில் சாலை மற்றும் கழிவுநீா் வாய்க்கால் இல்லாததால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 42-ஆவது வாா்டில் தமிழ்நகா், இந்திரா நகா் குடியிரு... மேலும் பார்க்க

கள்ளை பகுதியில் கிரானைட் குவாரி கருத்துகேட்புக் கூட்டத்தில் எதிா்ப்பு

கள்ளை பகுதியில் கிரானைட் குவாரி அமைக்கக்கூடாது என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துகேட்புக் கூட்டத்தில் சமூக நல ஆா்வலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள கள்ளை கிராமத்தி... மேலும் பார்க்க

தோகைமலை அருகே காளியம்மன் கோயில் தேரோட்டம்

தோகைமலை அருகே உள்ள கள்ளை ஊராட்சியில் காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பங்குனித் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த கள... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார போக்குவரத்து... மேலும் பார்க்க

பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் மீட்பு

கரூரில் பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. கரூா் ஜவஹா்பஜாரில் சுபாஷ்சந்திரபோஸ் சிலை அருகே பசுபதீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 1.67 ஏக்கா் நிலம் தனியாரால... மேலும் பார்க்க