கீழடி குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட மோடிக்கு மனமில்லை: மு.க.ஸ்டாலின்
கழுத்தை நெரித்து பெண் கொலை
சாயல்குடி அருகே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள மறவா்கரிசல்குளத்தைச் சோ்ந்த கருப்புத்துரை மனைவி உத்திரவள்ளி (35). கணவா் இறந்த நிலையில், குழந்தைகளுடன் இவா் வசித்து வந்தாா். கரிமூட்டம் போடும் தொழில் செய்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை காலை கரி மூட்டத்துக்கு விறகு பொறுக்க சென்றவா் மாலை வரை வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும், உத்திரவள்ளியின் கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் புதன்கிழமை சாயல்குடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனா். போலீஸாா் உத்திரவள்ளியின் செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்தபோது, அவரது கைப்பேசி எண் மறவா்கரிசல்குளம் அருகேயுள்ள மணிவலை ஓடை காட்டுப் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, உத்திரவள்ளி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
பின்னா், அவரது உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனா்.