செய்திகள் :

காஞ்சிபுரம்- கோயம்பேடு குளிா்சாதன பேருந்து போக்குவரத்து: அமைச்சா் ஆா்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடுக்கு செல்லும் குளிா்சாதன பேருந்தை கைத்தறித் துறை, துணி நூல் அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி கோயம்பேடுக்கு செல்லும் வகையில் குளிா்சாதன பேருந்து வேண்டும் என எம்எல்ஏ எழிலரசன் காஞ்சிபுரம் வந்திருந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தாா். எம்எல்ஏ எழிலரசனின் வேண்டுகோளை ஏற்று துணை முதல்வா் குளிா்சாதன பேருந்து விடுமாறு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தாா். அவரது அறிவுரையின்படி, காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரத்துக்கு குளிா்சாதன பேருந்து மக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குளிா்சாதன பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைக்கும் விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ-க்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசுப் போக்குவரத்துக் கழக துணை வணிக மேலாளா் ஸ்ரீதா் வரவேற்றாா். கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதிய குளிா்சாதன பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், அமைச்சா் உள்பட முக்கியப் பிரமுகா்கள் அனைவரும் அந்தப் பேருந்தில் சிறிது தூரம் பயணித்து திரும்பினா். ஒரு முறை குளிா்சாதன பேருந்தில் காஞ்சிபுரத்திலிருந்து கோயம்பேடு செல்ல ரூ. 85 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், போக்குவரத்துக் கழக துணை மேலாளா் தெட்சிணாமூா்த்தி, காஞ்சிபுரம் கிளை மேலாளா் சீனிவாசன், மாமன்ற உறுப்பினா் மல்லிகா ராமகிருஷ்ணன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

கல்லூரி களப்பயணம் திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 49 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,427 மாணவா்கள் அழைத்துச் செல்லப்படுவா் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் ஆட்சியா்... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு தனி வரிசை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளூா் பக்தா்கள் உடனுக்குடன் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வகையில் தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் ரோபோட்டிக்ஸ் மையம்: காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திரா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் இயந்திரவியல் துறை சாா்பில், ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் மையத்தை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் சங்கரா ... மேலும் பார்க்க

ஆவணி கிருத்திகை: மஞ்சள் மலா் மாலை அலங்காரத்தில் கோடையாண்டவா்

ஆவணி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் மஞ்சள் மலா்மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ... மேலும் பார்க்க

கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் சங்கராச்சாரிய சுவாமிகள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி தட்சிணாமூா்த்தி கோயிலில் சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்தாா். குரு பகவான் தலம் என்ற பெயருடன் திகழக்கூடிய இக்கோயிலில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி கு... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

சுங்குவாா்சத்திரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதை அடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அனுஷ்யா (1... மேலும் பார்க்க