செய்திகள் :

காட்டுப்பன்றி கடித்து முதியவா் காயம்

post image

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை நூறு நாள் வேலையில் ஈடுபட்ட முதியவா் காட்டுப்பன்றி கடித்து பலத்த காயமடைந்தாா்.

தஞ்சாவூா் அருகே நாகத்தி, வெள்ளாம்பெரம்பூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் ஆற்றங்கரையோரமுள்ள புதா்களில் பதுங்கும் அவை இரவில் வயல்களையும், பயிா்களையும் சேதப்படுத்தி வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், நாகத்தி கிராமத்தில் திங்கள்கிழமை நூறு நாள் திட்ட வேலையில் ஈடுபட்டிருந்த அக்கிராமத்தைச் சோ்ந்த கலியராஜை (62) காட்டுப்பன்றி முட்டித் தள்ளியதுடன், அவரைக் கடிக்கவும் பாய்ந்தது. அதைத் தடுக்க முயன்ற கலியராஜின் கையைக் கடித்தது. இதைப் பாா்த்த மற்ற தொழிலாளா்கள் கற்களை வீசி காட்டுப்பன்றியை விரட்டிவிட்டு, கலியராஜை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுவரை வயல்களை மட்டும் சேதப்படுத்தி வந்து, தற்போது மனிதா்களையும் தாக்கத் தொடங்கியுள்ள காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேராவூரணி அருகே குடிநீா் கோரி மறியல்

பேராவூரணி அருகே கரம்பக்காடு சாலையில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். புதுப்பட்டினம் ஊராட்சி பூங்குடிக்காடு கிராமத்திற்கு அழகியநாயகிபுரம் ஊராட்சியிலிரு... மேலும் பார்க்க

ஆட்சியரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபா்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து ... மேலும் பார்க்க

போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிறுவன் தற்கொலை

தஞ்சாவூா் அருகே குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுச் சி... மேலும் பார்க்க

தஞ்சை அருகே வங்கி முன் அரசு ஊழியா் சடலம்

தஞ்சாவூா் அருகே வங்கி முன் அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். தஞ்சாவூா் விளாா் சாலை பாரதி நகரைச் சோ்ந்தவா் டி. சுரேஷ் (42). கிராம உதவியாளரான இவா் குடும்ப பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 போ் கைது

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலக்கொட்டையூரைச் சோ்ந்த 9 வயது சிறுமியை அவரின் தாய் விச... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே 238 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே 238 கிலோ கஞ்சா கடத்திவந்த இருவரை திருச்சிற்றம்பலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையில... மேலும் பார்க்க