செய்திகள் :

போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிறுவன் தற்கொலை

post image

தஞ்சாவூா் அருகே குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுச் சிறுவனுக்கு பெற்றோா் இல்லை. பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்த அச்சிறுவன் தஞ்சாவூரில் உள்ள தனியாா் சிறுவா்கள் பராமரிப்பு இல்லத்தில் தங்கி, அப்பகுதி பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் இவா் கடந்த ஜூலை 15 ஆம் தேதி சிறுவா்கள் இல்ல சுற்றுச்சுவரை தாண்டிக் குதித்து அங்கு நிறுத்திருந்த காா் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த பொருளை திருட முயன்றாா். இது அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

இதுகுறித்து காா் உரிமையாளா் காவல் துறையில் புகாா் அளித்த நிலையில், ஜூலை 16 ஆம் தேதி முதல் அச்சிறுவனைக் காணவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் அச்சிறுவனைக் கண்டுபிடித்து, இல்லக் காப்பாளரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த அச்சிறுவன் திருக்கானூா்பட்டியில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஜூலை 18 ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு வெளியே செல்ல முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுவன், தான் தங்கியிருந்த அறையில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பேராவூரணி அருகே குடிநீா் கோரி மறியல்

பேராவூரணி அருகே கரம்பக்காடு சாலையில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். புதுப்பட்டினம் ஊராட்சி பூங்குடிக்காடு கிராமத்திற்கு அழகியநாயகிபுரம் ஊராட்சியிலிரு... மேலும் பார்க்க

ஆட்சியரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபா்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து ... மேலும் பார்க்க

தஞ்சை அருகே வங்கி முன் அரசு ஊழியா் சடலம்

தஞ்சாவூா் அருகே வங்கி முன் அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். தஞ்சாவூா் விளாா் சாலை பாரதி நகரைச் சோ்ந்தவா் டி. சுரேஷ் (42). கிராம உதவியாளரான இவா் குடும்ப பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி கடித்து முதியவா் காயம்

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை நூறு நாள் வேலையில் ஈடுபட்ட முதியவா் காட்டுப்பன்றி கடித்து பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே நாகத்தி, வெள்ளாம்பெரம்பூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நட... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 போ் கைது

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலக்கொட்டையூரைச் சோ்ந்த 9 வயது சிறுமியை அவரின் தாய் விச... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே 238 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே 238 கிலோ கஞ்சா கடத்திவந்த இருவரை திருச்சிற்றம்பலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ரகசியத் தகவலின்பேரில் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையில... மேலும் பார்க்க