செய்திகள் :

பேராவூரணி அருகே 238 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே  238  கிலோ கஞ்சா கடத்திவந்த இருவரை திருச்சிற்றம்பலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ரகசியத் தகவலின்பேரில் திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையிலான போலீஸாா் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசுக் காரில் 7 மூட்டைகளில் 238 கிலோ  கஞ்சா பொட்டலங்கள்  இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த தூத்துக்குடி மாவட்டம், சோதிங்கநல்லூா் பகுதி சுந்தரம் மகன் சீனிவாச பெருமாள் (25) திருநெல்வேலி மாவட்டம், திருமலைகொழுந்தபுரம் ஆறுமுகம் மகன் முத்துமாலை (21) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் கஞ்சா மூட்டைகள் சென்னையில் இருந்து கட்டையங்காடு பகுதிக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினாா். திருச்சிற்றம்பலம் போலீஸாா் விசாரிக்கின்றனா். பிடிபட்ட கஞ்சாவின் சா்வதேச மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பேராவூரணி அருகே குடிநீா் கோரி மறியல்

பேராவூரணி அருகே கரம்பக்காடு சாலையில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். புதுப்பட்டினம் ஊராட்சி பூங்குடிக்காடு கிராமத்திற்கு அழகியநாயகிபுரம் ஊராட்சியிலிரு... மேலும் பார்க்க

ஆட்சியரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ போலியாக சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசியில் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடும் நபா்களை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். இதுகுறித்து ... மேலும் பார்க்க

போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தில் சிறுவன் தற்கொலை

தஞ்சாவூா் அருகே குழந்தைகளுக்கான போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 15 வயதுச் சி... மேலும் பார்க்க

தஞ்சை அருகே வங்கி முன் அரசு ஊழியா் சடலம்

தஞ்சாவூா் அருகே வங்கி முன் அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை இறந்து கிடந்தாா். தஞ்சாவூா் விளாா் சாலை பாரதி நகரைச் சோ்ந்தவா் டி. சுரேஷ் (42). கிராம உதவியாளரான இவா் குடும்ப பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றி கடித்து முதியவா் காயம்

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை நூறு நாள் வேலையில் ஈடுபட்ட முதியவா் காட்டுப்பன்றி கடித்து பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே நாகத்தி, வெள்ளாம்பெரம்பூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகள் நட... மேலும் பார்க்க

கும்பகோணம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை: 3 போ் கைது

கும்பகோணம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலக்கொட்டையூரைச் சோ்ந்த 9 வயது சிறுமியை அவரின் தாய் விச... மேலும் பார்க்க