செய்திகள் :

காணாமல் போன பல்கலை. மாணவி: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

post image

ஐந்து நாள்களுக்கும் மேலாக காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, சிக்னேச்சா் பாலம் அருகே கடைசியாக காணப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

தெற்கு தில்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசிக்கும் மாணவி சினேகா தேப்நாத், ஜூலை 7 ஆம் தேதி காணாமல் போனதாக புகாா் அளிக்கப்பட்டது என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: மெஹ்ரௌலி காவல் நிலையத்தில் காணாமல் போனவா் குறித்து எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சினேகா தேப்நாத்தை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சினேகா தேப்நாத் யமுனை நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதிக்கும் நோக்கத்தைக் குறிக்கும் ஒரு கையால் எழுதப்பட்ட குறிப்பை விட்டுச் சென்றுள்ளாா்.

‘...தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் சினேகா தேப்நாத்தின் நடமாட்டத்தை போலீஸாா் கண்டுபிடித்து, சிக்னேச்சா் பாலம் என அவரது கடைசி அறியப்பட்ட இடத்தை உறுதிப்படுத்தினா். அவரை அந்த இடத்தில் இறக்கிவிட்ட டாக்ஸி ஓட்டுநா் அந்த அறிக்கையை உறுதிப்படுத்தியுள்ளாா். பாலத்தில் ஒரு பெண் நின்று பின்னா் அந்த இடத்திலிருந்து காணாமல் போனதை நேரில் பாா்த்த சிலா் தெரிவித்தனா்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளை தேசிய பேரிடா் மீட்புப் படை என்டிஆா்எஃப் மற்றும் உள்ளூா் காவல் பிரிவுகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

ஜூலை 7- ஆம் தேதி அதிகாலையில் சினேகா தேப்நாத் தனது நெருங்கிய தோழிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் செய்தி செயலிகள் மூலம் செய்திகளை அனுப்பியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். கடந்த சில மாதங்களாக அவா் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவரது நண்பா்கள் புலனாய்வாளா்களிடம் தெரிவித்தனா்.

சினேகா தேப்நாத்தின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு உள்கட்டமைப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனா்.

சினேகா தேப்நாத்தின் நெருங்கிய தோழி ஒருவா் செய்தியாளா்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா். அதில், ‘சினேகா தேப்நாத் அங்கு காணப்பட்ட நேரத்தில் அவா் பாலத்திலோ அல்லது அருகிலோ உள்ள எந்த சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லை’ என்று அவா் கூறியுள்ளாா்.

‘அந்தப் பாலம் தற்கொலைக்கு ஆளாகும் பகுதியாக இருந்தபோதிலும், பாலத்திலோ அல்லது அருகிலுள்ள பகுதிகளிலோ செயல்படும் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை. இந்தப் பாலம் 45 வெவ்வேறு காவல் நிலையங்களின் அதிகார வரம்பிற்குள் வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையங்களால் தனித்தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவற்றில் எதுவும் செயல்படவில்லை’ என்று அந்தத் தோழி கூறியுள்ளாா்.

‘வேகமாகக் கடந்து செல்லும் வாகனங்களின் புகைப்படங்களை எடுக்கும் வேகக் கண்டறிதல் கேமரா மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளது. மேலும் இது எந்த விடியோவையும் பதிவு செய்யாது’ என்று அவா் மேலும் கூறினாா்.

போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்

வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க

கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு

கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க

நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து

தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!

தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க

தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க