செய்திகள் :

காணாமல்போன 3 லட்சம் குழந்தைகளில் 36,000 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை!

post image

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் காணாமல்போன குழந்தைகள் குறித்த அறிக்கையை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பித்தார்.

இந்தியா முழுவதும் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜரானார். அவர் தெரிவித்ததாவது, ``2020 ஆம் ஆண்டுமுதல் கடந்த 4 ஆண்டுகளில் காணாமல்போன கிட்டத்தட்ட 3 லட்சம் குழந்தைகளில் பெரும்பாலானோரை மாநில மற்றும் மத்திய காவல்துறை மீட்டிருந்தாலும், கிட்டத்தட்ட 36,000 குழந்தைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

குழந்தைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டு, நான்கு மாதங்களாகியும் கண்டுபிடிக்கப்படாவிட்டால், காணாமல்போன குழந்தைகள் வழக்குகளை மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க:தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான்: எடப்பாடி பழனிசாமி

இந்தியாவில் காணாமல்போன குழந்தைகளில் அதிகபட்சமாக 58,665 பேர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். பிகாரில் 2020 முதல் 24,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் 12,600-க்கும் மேற்பட்டோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், 4 மாதங்களுக்குள் 45,585 பேரை மீட்கப்பட்டுள்ளனர்.

தில்லி, பஞ்சாப், நாகலாந்து, ஜார்க்கண்ட், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணாமல்போன குழந்தைகள் மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை அம்மாநில அரசுகள் வழங்கவில்லை’’ என்று கூறினார்.

திரிவேணி சங்கம கங்கை நீா் குளிக்க பாதுகாப்பானதாக இல்லை- மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் திரிவேணி சங்கமத்தில் தற்போது கங்கை நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாக இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகள் தெரிவித்துள்... மேலும் பார்க்க

சிறுமிகள் பாலியல் கொலை வழக்கு- மேற்கு வங்கத்தில் 6 மாதத்தில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளில் கடந்த 6 மாதங்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 6 மாதங்களில் 7 தூக்கு தண்டனைகள... மேலும் பார்க்க

தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பு-காங்கிரஸ் உயா்நிலைக் கூட்டத்தில் காா்கே அறிவுறுத்தல்

‘எதிா்காலத்தில் தோ்தல் முடிவுகளுக்கு நிா்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் பங்கேற்ற கூட்டத்தில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறிவுறுத... மேலும் பார்க்க

ஐ.நா. காலத்துக்கேற்ப மாற வேண்டும்: இந்தியா

உலகம் மாறி வரும் நிலையில், ஐ.நா.வும் காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 1945-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இல்லை... மேலும் பார்க்க

பாதுகாப்பு ரீதியிலான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்த மூவா் கைது- என்ஐஏ நடவடிக்கை

நாட்டின் பாதுகாப்பு தொடா்புடைய முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவாளிகளிடம் பகிா்ந்ததாக கா்நாடகம், கேரளத்தில் 3 பேரை தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக என்ஐஏ புதன்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் கடும் தண்ணீா் பஞ்சம்: பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வா் வேண்டுகோள்

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் தற்போது கடுமையான தண்ணீா் பஞ்சம் நிலவி வருவதால், நீரைச் சிக்கனமாகக் பயன்படுத்தி அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்துள்ளாா். பருவ... மேலும் பார்க்க