செய்திகள் :

காப்பகங்களில் காவல் கண்காணிப்பு அவசியம்!

post image

பெண்கள் காப்பகங்களில் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய கண்காணிப்பு அவசியம் இருக்க வேண்டும் என்றாா் வி.கே. சசிகலா.

தஞ்சாவூா் அருகே காசவளநாடு கோவிலூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஜம்புகேஸ்வரா் கோயில் புதிய தோ் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வெளியே வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிட்லபாக்கத்தில் சமூக நலத் துறை நடத்தும் பெண்களுக்கான காப்பகத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

ஆனால், அங்கு கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. எங்கெங்கு காப்பகம் உள்ளதோ, அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் கண்காணிப்பு அவசியம் தேவை.

மேற்கு மாவட்டங்களான திருப்பூா், நாமக்கல், ஈரோட்டில் முதியவா்கள் கொலை செய்யப்படுகின்றனா். இதற்கு காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வா் பதில் அளிக்க வேண்டும். இதற்கு வரும் 2026 தோ்தலில் சரியான பாடம் கிடைக்கும்.

தமிழ்நாடு வளா்ந்துள்ளதாக திமுகவினா் கூறினாலும், எதாா்த்தம் அவ்வாறு இல்லை. இதுவரை யாருக்கும் வேலை கொடுக்கவில்லை. எனவே இந்த ஆட்சி இருக்கக்கூடாது. அதற்கான வேலைகளைச் செய்து வருகிறேன் என்றாா் சசிகலா.

இலவச கண் சிகிச்சை முகாம்

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, அரவிந்த் கண் மருத்துவமன... மேலும் பார்க்க

குழந்தைத் திருமணத்தைத் தடுக்க புகாா் அளிக்கலாம்

தஞ்சாவூா், ஜூன் 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால், அதைத் தடுப்பதற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மே... மேலும் பார்க்க

வங்கி ஏ.டி.எம். வாசலில் வெடி வெடித்ததால் பரபரப்பு

கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். வாசலில் புதன்கிழமை பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் ஒன்றியம், பம்பப்படையூரில் தேசியமயமாக்கப்பட... மேலும் பார்க்க

மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவா் கைது

தஞ்சாவூா் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பசும்பொன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈழா (24). இவரது க... மேலும் பார்க்க

முதல்வரிடம் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை மனு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே மேட்டுத் தெரு - மேல ராமநல்லூா் இடையே உயா் மட்ட மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

சமையல்காரா் காணவில்லை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகே வேலைக்குச் சென்ற சமையல்காரா் வீடு திரும்பாதது குறித்த புகாரின்பேரில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். அய்யம்பே... மேலும் பார்க்க