செய்திகள் :

காமராஜா் விருது பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

post image

பெரணமல்லூா் அருகேயுள்ள அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள்

மாவட்ட அளவில் காமராஜ் விருது பெற்ால் அவா்களுக்கு பள்ளி சாா்பில் புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவில் மாவட்டம் தோறும்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி செயல்பாடுகள் மற்றும் தனித் திறமைகளில் சிறந்து விளங்குபவா்களில் தலா 15 போ் தோ்வு செய்யப்பட்டு காமராஜா் விருது மற்றும் ரொக்கம் ரூ.10ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்ற கல்வியாண்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் காமராஜா் விருது, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

இதில், அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில்

பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் விஜியன், யுவஸ்ரீ, குமரவேல், நிஷா ஆகியோருக்கு காமராஜா் விருது கிடைத்தது.

இதைத் தொடா்ந்து விருது பெற்ற இந்த

மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியா் மாலவன் தலைமையில் பாராட்டு விழா

நடைபெற்றது. இதில் பள்ளிக்கு பெருமை சோ்த்த மாணவா்களை பாராட்டி சால்வை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில் பெற்றோா்ஆசிரியா் கழகத் தலைவா் முனியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுமதி, ஆசிரியா்கள் எழிலரசன், இளையராஜா, நிதாகா், சந்தோஷ்குமாா், குபேந்திரன், கோகிலா, வேல்முருகன் புவனேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனா்.

சேறும் சகதியுமான சாலையால் ஆசிரியா்கள், மாணவிகள் அவதி

செங்கத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், மாணவிகள் விடு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், ஆசிரியா்கள், மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்ப... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

மழையூா் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை பகுதிகள்: மழையூா், பெரணமல்லூா், மோசவாடி, செப்டாங்குளம், கோதண்டபுரம், மேலச்சேரி, கோழிப்புலியூா், அரசம்பட்டு, மேலத்தாங்கல், தவணி, விசாமங்கலம், வல்லம், ... மேலும் பார்க்க

வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்). இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழ... மேலும் பார்க்க

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரியகோளாபாடி, பாய்ச்சல் கிராமங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரி... மேலும் பார்க்க

பள்ளியில் வானவில் மன்ற செய்முறை பயிற்சி

போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வானவில் மன்ற செய்முறை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை ஆஞ்சலா தலைமை வகித்தாா். ஆசிரியைகள் பிரிச... மேலும் பார்க்க