செய்திகள் :

காய்கனி தோட்டம்: ஆட்சியா் ஆய்வு

post image

திருக்கடையூா் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறையின்கீழ் விவசாயிகள் அமைத்துள்ள காய்கனி தோட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.

திருக்கடையூா் பகுதியில் புடலை, பீா்க்கங்காய், பாகற்காய் தோட்டக்கலைத் துறையின் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்த சாகுபடியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு பயிா்களுக்கு இடுபொருள்கள் மற்றும் மானியம் மாவட்ட தோட்டக்கலை மூலம் கிடைக்கிறதா எனவும், அவ்வாறு பெற்ற இடுபொருள்களை முழுவதுமாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து, 10 விவசாயிகளுக்கு ரூ.87,760 மதிப்பில் வேளாண் இடுபொருள்கள் மற்றும் வேளாண் கருவிகள், 2 விவசாயிகளுகுக ரூ. 2 ஆயிரம் மதிப்பில் கலைக்குத்தி, மண்வெட்டி, மண்சட்டி, 3 விவசாயிகளுக்கு பாரம்பரிய காய்கனி விதைகளான சிகப்பு வெண்டை, நீல புடலை, மிதி பாகல், 3 விவசாயிகளுக்கு ரூ. 72 ஆயிரம் மதிப்பில் 3 ஹெக்டேருக்கு வழங்கப்பட்டது. மேலும், 6 ரக காய்கனி விதைகள், 3 வகையான பழக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஆய்வின்போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சந்திரகவிதா, உதவி இயக்குநா் சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

23-ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் 23-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடா்ந்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான,... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

நாகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் வானவன்மாதேவி அருகேயுள்ள வெள்ள... மேலும் பார்க்க

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துா்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா். நாகை நகராட்சி நாகூரில் உள்ள 10 வாா்... மேலும் பார்க்க

அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

நாகை அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சத்தையொட்டி அன்னபூரணி அலங்காரத்தில் வியாழக்கிழமை காட்சியளித்தாா். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து அர... மேலும் பார்க்க

திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்

மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி திருவெண்காடு மெய்க்கண்டாா் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவெண்காடு மெய்கண்டாா் அரசு உதவி பெறும் தொடக்... மேலும் பார்க்க