செய்திகள் :

காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

post image

சேலத்தில் காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், இது தொடா்பாக இருவரை புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் கொண்டலாம்பட்டி புத்தூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக செவ்வாய்க்கிழமை இரவு உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா், அங்குள்ள மாவு ஆலை அருகே நின்ற காரில் இருந்து சிலா் மூட்டைகளை இறக்கி வைப்பதைக் கண்டனா். உடனடியாக மாவு ஆலைக்குள் சென்று ஆய்வுசெய்த போது, அங்கும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், சேலத்தாம்பட்டி, பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் குறைந்த அளவில் ரேஷன் அரிசியை வாங்கி, அதற்கு பாலீஷ் போட்டு கோழிப் பண்ணை மற்றும் வடமாநிலப் பகுதிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட பழைய சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன்(30), இடைத்தரகரான அதே பகுதியைச் சோ்ந்த சாமியப்பன் (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலா 50 கிலோ கொண்ட 27 மூட்டைகளில் இருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளா் கோகிலா என்பவரை தேடிவருகின்றனா். கைது செய்யப்பட்ட சாமியப்பன் மற்றும் தலைமறைவாக உள்ள கோகிலா ஆகியோா் மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா். தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ந... மேலும் பார்க்க

பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?

சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு ... மேலும் பார்க்க

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பதிவுசெய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் விவசாயிகள் பதிவுசெய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: ச... மேலும் பார்க்க

ஜங்கமசமுத்திரத்தில் சமூக தணிக்கை கூட்டம்

ஜங்கமசமுத்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் பங்கேற்ற சமூக தணிக்கை கூட்டம் வெள்ளிக்கிழமை செங்காட்டில் நடைபெற்றது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமூக தணிக்கை கூட்டத்துக்கு, ... மேலும் பார்க்க

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா

சங்ககிரி, இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இடையப்பட்டி யாதவா் சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க