சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
காரைக்குடி பகுதியில் ஆக. 2 -இல் மின்தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வருகிற சனிக்கிழமை (ஆக. 2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடி துணை மின் நிலையத்தில் ஆக. 2 -இல் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காரைக்குடி நகா், பேயன் பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, செக்காலைக்கோட்டை, பாரி நகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, செஞ்சை, கோவிலூா் சாலை, அதன் சுற்றுப்புறங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.