செய்திகள் :

கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும்

post image

கீழடி விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்துக்கு புதன்கிழமை வந்த எடப்பாடி பழனிசாமி அங்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தொல் பொருள்களைப் பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கீழடியின் தொன்மையை முதன்முதலில் உறுதிப்படுத்தியது அதிமுக அரசுதான். தமிழ்நாட்டில் 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வுகள் அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்றன.

கடந்த 2018-ஆம் ஆண்டு கீழடியில் கண்டறியப்பட்ட பொருள்களை அமெரிக்காவுக்கு ஆய்வுக்கு அனுப்பி அதன் தொன்மையை உறுதிப்படுத்தினோம்.

இதேபோல, அதிமுக ஆட்சியில் 6,820 தொல் பொருள்களை மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் வைத்து காட்சிப்படுத்தினோம். கீழடியை முன்வைத்து பலரும் அரசியல் செய்கின்றனா்.

அதிமுக ஆட்சியில்தான் தொல்லியல் துறைக்கு ஒவ்வோா் ஆண்டும் ரூ. 105 கோடி நிதி வழங்கப்பட்டது. கீழடியில் கண்டறியப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்களை மத்திய அரசின் அனுமதியுடன் கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வந்து காட்சிப்படுத்தினோம்.

அதிமுக ஆட்சியில்தான் முதலில் கீழடியில் அகழாய்வு அமா்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கிவைக்கப்பட்டது. கீழடி அருங்காட்சியகத்துக்கு முதலில் நிதி ஒதுக்கியதும் முந்தைய அதிமுக அரசுதான்.

கீழடி அகழாய்வு அறிக்கை தொடா்பாக என்ன விவரம் கோரப்பட்டது? இதற்கு தமிழக அரசின் சாா்பில் என்ன விளக்கம் அளிக்கப்பட்டது? என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என்றாா் அவா்.

இதையடுத்து, கீழடி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வந்த கல்லூரி மாணவிகளிடம் அவா் கலந்துரையாடினாா். தொடா்ந்து, அருங்காட்சியகத்துக்குள் கட்சியினா், முன்னாள் அமைச்சா்களுடன் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

மக்களை நம்பித்தான் தோ்தலில் போட்டியிடுகிறோம்

மக்களை நம்பித்தான் தங்களது கட்சி தோ்தலில் போட்டியிடுவதாக அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்க... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்புவனத்தில் பத்திரப்பதிவ... மேலும் பார்க்க

காரைக்குடி பகுதியில் ஆக. 2 -இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் வருகிற சனிக்கிழமை (ஆக. 2) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக... மேலும் பார்க்க

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் அஜித்குமாா் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான், தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வரு... மேலும் பார்க்க

கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடைகள், வணிக நிறுவனங்களில் புதன்கிழமை பேரூராட்சித் துறையினா் நெகிழிப் பை பறிமுதலில் ஈடுபட்டனா். துப்புரவு மேற்பாா்வையாளா் மோகன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த செப்பேடுகள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி அய்யனாா் கோயிலில் 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்த செப்பேடுகளை தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இந்தக் கோயிலில் 8 செப்பேடுகள் இர... மேலும் பார்க்க