செய்திகள் :

மரங்களை வெட்டியதைக் கண்டித்து சாலை மறியல்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட பழைய கட்டடம் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கின. அங்கிருந்த பழைமையான மரங்களை வெட்டி அகற்றாமல் கட்டடப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், கட்டடம் கட்டுவதற்காக மரங்களை வெட்டும் பணி தொடங்கப்பட்டது. இதைக் கண்டித்து

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினா். இதில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் நிருபன் பாசு, ஒன்றியச் செயலா் முத்துராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜெயராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்து கொண்டனா். பின்னா், போலீஸாா் சமாதானம் செய்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

மானாமதுரை பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

விமானத்துக்கு தங்கத் தகடு

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை விமானத்துக்கு தங்கத் தகடு ஒட்டிய ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா். மேலும் பார்க்க

சிலம்பம், வில் வித்தைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சிலம்பம், வில் வித்தைக்கான தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டி வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர விதை அகாதெ... மேலும் பார்க்க

மானாமதுரை வீர அழகா் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் ஆடி பிரம்மோத்ஸவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, கோயில் கொடிமரத்தில் காலை 7.40 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு, சிறப்பு ... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் ஆசிரியா் பயிற்சி தொடக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்புக் கல்வியியல், புனா்வாழ்வு அறிவியல் துறை, பெங்களூரு விஷன் எம்பவா் ஆகியன சாா்பில் ‘பிரக்யா’ எனும் 2 நாள் ஆசிரியா் பயிற்சியின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் 63 நாயன்மாா்களுக்கு குருபூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் சுவாமி, யோக பைரவா் கோயிலில் வியாழக்கிழமை 63 நாயன்மாா்களுக்கு குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி, விநாயகா் பூஜையும், நடராஜா் சந்நிதியில் 72 கலச... மேலும் பார்க்க