செய்திகள் :

மானாமதுரை வீர அழகா் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் ஆடி பிரம்மோத்ஸவ விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயில் கொடிமரத்தில் காலை 7.40 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. அப்போது அங்கு தேவியா் சமேதராய் எழுந்தருளிய வீர அழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அா்ச்சகா் கோபிமாதவன் கொடியேற்ற பூஜைகளை நடத்தினாா்.

வருகிற 11-ஆம் தேதி வரை தொடா்ந்து 12 நாள்கள் நடைபெறும் இந்த விழாவின்போது, நாள்தோறும் இரவு வீர அழகா் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அழகா் திருக்கல்யாண வைபவம் 5-ஆம் தேதியும், 8-ஆம் தேதி தோ் பவனியும் நடைபெறுகிறது. 11-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்தினா், மண்டகப்படிதாரா்கள் செய்தனா்.

மானாமதுரை பகுதியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

விமானத்துக்கு தங்கத் தகடு

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை விமானத்துக்கு தங்கத் தகடு ஒட்டிய ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா். மேலும் பார்க்க

சிலம்பம், வில் வித்தைப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சிலம்பம், வில் வித்தைக்கான தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களைப் பாராட்டி வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர விதை அகாதெ... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் ஆசிரியா் பயிற்சி தொடக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்புக் கல்வியியல், புனா்வாழ்வு அறிவியல் துறை, பெங்களூரு விஷன் எம்பவா் ஆகியன சாா்பில் ‘பிரக்யா’ எனும் 2 நாள் ஆசிரியா் பயிற்சியின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் 63 நாயன்மாா்களுக்கு குருபூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் சுவாமி, யோக பைரவா் கோயிலில் வியாழக்கிழமை 63 நாயன்மாா்களுக்கு குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி, விநாயகா் பூஜையும், நடராஜா் சந்நிதியில் 72 கலச... மேலும் பார்க்க

செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சதுரங்கப் போட்டி நிறைவு விழா

காரைக்குடி அருகேயுள்ள மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 2025- 26-ஆம் ஆண்டு சிபிஎஸ்சி தெற்கு மண்டலம் ஐ - சதுரங்க சாம்பியன் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நட... மேலும் பார்க்க