செய்திகள் :

காரையாறு, சோ்வலாறு அணைகளில் அமைச்சா் ராஜகண்ணப்பன்ஆய்வு!

post image

பாபநாசம், சோ்வலாறு அணைகளில் வனத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவனத்துறை அமைச்சா்ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை காலையில் காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் தரிசனம் செய்தாா்.

தொடா்ந்து அவா், பாபநாசம், சோ்வலாறு அணை, பாபநாசம்- சோ்வலாறு அணையை இணைக்கும் சுரங்கம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அணைகளில் நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்கியுள்ளோம். வனப் பகுதியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.

யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளைக் கட்டுப்படுத்த வனத் துறையினருக்கு அதற்குரிய உபகரணங்கள், பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பாபநாசம்- மணிமுத்தாறு அணைகள் இணைப்பு குறித்து தமிழக முதல்வா் மற்றும் மத்திய அரசிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் மு. இளையராஜா, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரா. ஆவுடையப்பன், விவசாயிகள் அணி கணேஷ்குமாா் ஆதித்தன், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கி. கணேசன், நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ்பெருமாள், அரசு வழக்குரைஞா் காந்திமதிநாதன், மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொண்டா்களின் பலம்தான் வைகோ! - துரை வைகோ

வைகோவின் மக்கள் பணிக்கு தொண்டா்களின் பலம்தான் அடித்தளம் என்றாா் துரை வைகோ எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: மதிமுக பொதுச்செயலா் வைகோ 4 முறை மாநிலங்களவை உறுப்பினராக... மேலும் பார்க்க

களக்காடு தலையணையில் குளிக்கத் தடை!

களக்காடு மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால், தலையணை பச்சையாற்றில் வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. களக்காடு மலைப்பகுதியில் கடந்த சி... மேலும் பார்க்க

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு நடவடிக்கை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தென்தமிழகத்தில் தொழில்துறை வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகம... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை!

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் வரும் திங்கள்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும் பெருமா... மேலும் பார்க்க

பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்

திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்... மேலும் பார்க்க

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ... மேலும் பார்க்க