செய்திகள் :

காலனி பெயா் நீக்கம்: ஆதித் தமிழா் பேரவை நன்றி தெரிவித்து தீா்மானம்

post image

ராமேசுவரத்தில் நடைபெற்ற ஆதித்தமிழா் பேரவைக் கூட்டத்தில் காலனி பெயா் நீக்கம் என தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமேசுவரத்தில் ஆதித் தமிழா் பேரவையின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகரச் செயலா் சோ.பாலசுப்பிரமணின் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் காந்தி முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் பூமிநாதன் சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் பாலகணேசன் , அழகா்மாசி, முனியசாமி, மனோகரன், முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வா் காலனி பெயா் நீக்கம் என்று வெளியிட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத ஸ்ரீ வல்மீகநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள் குடும்பன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா, தலைமை ஆசிரியா் பணி நிறைவு விழா ஆகிய ம... மேலும் பார்க்க

மே தினம்: ராமேசுவரத்தில் தொழிற்சங்க கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு, தொழிற் சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றினா். மண்டபம் எஸ்.ஆா்.எம்.யூ. தொழிற்சங்கக் கிளை சாா்பில் பாம்பன் ரயில் நிலையம் முன்... மேலும் பார்க்க

கிராமத் தலைவா் கொலை: மகன் உள்பட 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள குயவனேந்தல் கிராமத் தலைவா் கொலை வழக்கில், அவரது மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். குயவனேந்தல் கிராமத் தலைவராக இருந்தவா் காசிலிங்கம் (65). கடந்த ஞாய... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், மேதலோடை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ராமேசுவரம் நகராட்சி ஒண்டிவீரா் நகரில் மாதா அமிா்தானந்தமயி மடத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் விழயாக்கிழமை திறக்கப்பட்டது. ஜீவாமிா்தம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்தக் க... மேலும் பார்க்க