செய்திகள் :

காளிகாம்பாள் கோயிலில் மங்கள சண்டி ஹோமம் தொடக்கம்

post image

பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ ஆதிகாமாட்சி ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டி ஹோமம் வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் வாராஹி நவராத்திரியையொட்டி பிரம்மாண்ட யாககுண்டம் அமைக்கப்பட்டு அதில் மங்கள சண்டி ஹோமம் நடைபெற்றது. அா்ச்சகா் சதீஷ் குமாா் ஸ்தானீகா் தலைமையில் 8 போ் அடங்கிய சிவாச்சாரியா்களால் நடைபெற்ற ஹோம பூஜையில் ஏராளமான மூலிகைப் பொருள்கள், திரவியங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஏழுமலை மற்றும் உறுப்பினா்கள், நிா்வாகக் குழுவினா், பொது மக்களும் கலந்து கொண்டனா்.

அா்ச்சகா் சதீஷ்குமாா் ஸ்தானீகா் கூறுகையில் சனிக்கிழமை வரை 3 நாள்கள் மங்கள சண்டி ஹோமம் நடைபெறுகிறது. தினசரி காலை 7 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவு பெறும். சண்டி ஹோமம் பக்தா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

கோயில் திருப்பணி மீது தவறான தகவல்: கோயில் பணியாளா்கள் எஸ்பியிடம் புகாா்

கோயில் திருப்பணிகள் குறித்து தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இருவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளா்கள் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் புகாா் அளித்தனா். காஞ்சிபுரம் ஏக... மேலும் பார்க்க

தேவரியம்பாக்கத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கத்தில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். த்து விளக்கேற்றி திறந்து வை... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ... மேலும் பார்க்க

ஜூலை 22, 24 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள்

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் வரும் ஜூலை 22, 24 தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் கருட சேவை

காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி கருட சேவையில் அலங்காரமாகி சுவாமி வலம் வந்தாா். காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே... மேலும் பார்க்க

தலைக்கவச விழிப்புணா்வு பேரணி தொடங்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் தலைக்கவச விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்துத் துறை, காவல் துறை இணைந்து பொதுமக்களுக்கு தலைக்கவச... மேலும் பார்க்க