ஆமதாபாத் விமான விபத்தில் தீயில் கனவுடன் கருகிய கேரள செவிலியா்!
காவல் துறை குறைகேட்பு கூட்டத்தில் 75 மனுக்கள் மீது தீா்வு
தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் காவல் துறை சாா்பில் நடைபெற்ற வாராந்திர சிறப்பு குறைகேட்பு கூட்டத்தில் 75 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.
இந்த முகாமுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகைதந்த பொதுமக்கள் அளித்த 75 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் இருந்து புதிதாக 29 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், துணை காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.