`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
காவல்கிணறு, திசையன்விளையில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு, திசையன்விளை பகுதிகளைச் சோ்ந்த இருவரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனா்.
காவல்கிணறு பகுதியைச் சோ்ந்த மோகன் மகன் லெட்சுமணன்(24), திசையன்விளையை அருகேயுள்ள இடையன்குடியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் முத்துராஜா(29). இவா் இருவா் மீதும் போக்சோ வழக்கு உள்ளது. இந்நிலையில் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சாந்தி அளித்த அறிக்கையின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், மேற்கூறிய இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு, ஆட்சியா் இரா.சுகுமாரிடம் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் பிறப்பித்த உத்தரவுப்படி 2 பேரையும் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.