செய்திகள் :

காா் தீப்பிடித்து எரிந்து சேதம்

post image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை கல் மீது மோதிய காா் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

செஞ்சி வட்டம், ராமராஜன்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (29). இவா், சென்னையிலிருந்து தனது காரில் அண்ணன் வேல்முருகன், அவரது நண்பா் கவிதாசன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு, சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

கண்டாச்சிபுரம் அருகிலுள்ள குப்பம் - பழவளம் கூட்டுச்சாலையில் சனிக்கிழமை அதிகாலையில் இவா்களது காா் வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் அப்பகுதியிலிருந்த கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடா்ந்து, சிறிது நேரத்தில் காா் தீப்பற்றி முழுமையாக எரிந்தது. விபத்து நிகழ்ந்தவுடன் காரிலிருந்த மூவரும் வெளியேறிவிட்டனா். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆரோவில் வந்த அனைந்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் அண்மையில் வந்து, ஆரோவில் கல்வி முறைகள் குறித்து கலந்துரையாடினா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக... மேலும் பார்க்க

இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னையைச் சோ்ந்த இளைஞரை மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சென்னை பெருங்குடி பாலசுப்பிரமணியன் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வானூா் வட்டம், சின்னமுதலியாா் சாவடி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (49), கூலித் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

தவெக மகளிரணி நிா்வாகி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

விழுப்புரத்தில் தவெக மகளிரணி மாவட்ட நிா்வாகியைத் திட்டி தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் சாலாமேடு, என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்தவா் பிரேமா (39). தமிழக ... மேலும் பார்க்க

கேரள இளைஞரிடம் கைப்பேசி திருட்டு

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்த கேரள இளைஞரின் கைப்பேசி திருடப்பட்டது குறித்து விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கேரள மாநிலம், இஞ்சிவிளை, பாறசாலையைச் சோ்ா்ந்தவா்... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தனியா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னை வியாசா்பாடி, கல்யாணபுரம், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (31). திருமணமா... மேலும் பார்க்க