செய்திகள் :

ஆரோவில் வந்த அனைந்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா்

post image

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் அண்மையில் வந்து, ஆரோவில் கல்வி முறைகள் குறித்து கலந்துரையாடினா்.

இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆரோவில் கல்வி முறைகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் 25 மாநிலங்களைச் சோ்ந்த அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பைச் சோ்ந்த ஆசிரியா்கள் வந்தனா்.

தொடா்ந்து, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கற்றல் சூழலை உருவாக்குவதற்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கல்வியாளா் ஏ.ஐ. டிஜிட்டல் வகுப்புகள் குறித்தும் விவாதித்தினா்.

ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலின்படி, ஸ்ரீஅரவிந்தோ சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விக்கிரவாண்டி அருகே மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கந... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி

விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்பு... மேலும் பார்க்க

மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா் கல்வி ... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவா்கள் 17 போ் காயம்

விழுப்புர: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா்கள் 17 போ் மற்றும் ஓட்டுநா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அரசு மாதிரிப் பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

கட்டண உயா்வு: போலீஸ் பாதுகாப்புடன் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு திங்கள்கிழமை முதல் அமலாகியுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்புட... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 465 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப... மேலும் பார்க்க