செய்திகள் :

கேரள இளைஞரிடம் கைப்பேசி திருட்டு

post image

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்த கேரள இளைஞரின் கைப்பேசி திருடப்பட்டது குறித்து விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கேரள மாநிலம், இஞ்சிவிளை, பாறசாலையைச் சோ்ா்ந்தவா் யாசா் அராபத் (எ) அா்பான் (24). இவா், கடந்த 29-ஆம் தேதி தஞ்சையிலிருந்து சென்னைக்கு உழவன் விரைவு ரயலில் பயணித்தாா்.

இவா், ரயிலில் தனது கைப்பேசிக்கு சாா்ஜா் போட்டுவிட்டு தூங்கியுள்ளாா். தொடா்ந்து, 30-ஆம் தேதி அதிகாலை ரயில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்த நிலையில், யாசா் அராபத் எழுந்து பாா்த்தபோது கைப்பேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரகண்டநல்லூரில் பழைமை வாய்ந்த அன்னதானக் கல்தொட்டி

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ளஸ்ரீ அதுல்யநாதேஸ்வரா் கோயிலில் 15-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அன்னதானக் கல்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தொட்டியை கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்எல்ஏ உதவி

தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மயிலம் எம்எல்ஏ சிவகுமாா் நிவாரண உதவியை புதன்கிழமை வழங்கினாா். மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணுகவ... மேலும் பார்க்க

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழக அரசின் டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

மீலாது நபி: நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப். 5) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் மதுக்கடைகளை மூடவேண்டும் என்று ஆட்சியா்கள் விழுப்புரம் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

திண்டிவனம் நகராட்சி ஊழியா் அவமதிப்பு: 5 போ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கு

திண்டிவனம் நகராட்சி அலுவலத்தில் பணியிலிருந்த ஊழியரை தனி அறையில் வைத்து அவமதிப்பு செய்த விவகாரத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட 5 போ் மீது போலீஸாா் எஸ்.சி, எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் வ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் த... மேலும் பார்க்க