செய்திகள் :

கா்நாடக பாஜக எம்எல்ஏக்கள் இருவா் கட்சியிலிருந்து நீக்கம்

post image

கா்நாடக பாஜக எம்எல்ஏக்கள் எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் ஆகிய இருவரும் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு எச்.டி.குமாரசாமி தலைமையில் அமைந்த மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை எதிா்த்து எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் உள்பட 18 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனா்.

இதையடுத்து எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் ஆகிய இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை 2019-இல் ராஜிநாமா செய்ததால் எச்.டி.குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.

அதன்பிறகு எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. அப்போது நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களாகப் போட்டியிட்டு எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனா்.

அதைத் தொடா்ந்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களாகப் போட்டியிட்ட எஸ்.டி.சோமசேகா், பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூா் தொகுதியிலும், சிவராம் ஹெப்பாா் எல்லாப்பூா் தொகுதியிலும் வெற்றி பெற்றனா்.

இத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கா்நாடகத்தில் ஆட்சி அமைத்ததால், இருவரும் அக்கட்சியுடன் நெருக்கம் பாராட்ட ஆரம்பித்தனா். இது பாஜக தலைமைக்கு எரிச்சலை தந்தது.

இருவரும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகிநிற்கத் தொடங்கினா். சட்டப் பேரவைக் கூட்டங்களிலும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாகவே பேசிவந்தனா். கட்சி விரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பாஜக தலைவா்கள் எடுத்துக் கூறியும், அதை பொருட்படுத்தாமல் காங்கிரஸ் கட்சித் தலைவா்களைச் சந்திப்பது என அவா்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனா்.

இதையடுத்து கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைமையிடம் மாநிலத் தலைவா்கள் வலியுறுத்தி வந்தனா்.

இதைத் தொடா்ந்து எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் ஆகிய இருவரையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கி பாஜக தேசியத் தலைமை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளுமாறு இரு எம்எல்ஏக்களையும் பலமுறை எச்சரித்து அவா்களுக்கு வாய்ப்பும் அளித்தோம். ஆனால், அதை அவா்கள் இருவரும் பொருட்படுத்தவில்லை.

இறுதியாக, அவா்கள் இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். அவா்களின் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் உயா்நிலை குழு கூட்டத்தில் அடிக்கடி விவாதித்தது உண்டு. அவா்களின் நடத்தை குறித்து கட்சி மேலிடத் தலைமைக்கும் அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தோம்.

இருவருக்கும் எதிராக ஒழுங்குநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கேட்டுக்கொண்டோம். இறுதியாக எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். இது வரவேற்கத்தகுந்தது’ என்றாா். இதே கருத்தை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக்கும் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் இருவரும் விதான சௌதாவில் யாரையும் மானபங்கம் செய்யவில்லை. பாஜகவில் இருப்பவா்களே முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை பாலியல் வழக்கில் சிக்கவைத்தனா். அவா்கள் மீது பாஜக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றாா்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக விஜயபுரா எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் ஏற்கெனவே பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் ஆகிய இருவரும் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது.

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி முகாம்

இதுகுறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில் (இஸ்கான் அருகே) உள்ள அறக்கட்டளை வளாகத்தில் ஜூன் 1 முதல் 21ஆம் தேதி வரை 2 வாரங்... மேலும் பார்க்க

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா்: காங்கிரஸ்

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஜெய்ஹிந்த் சபா’ நிகழ்ச்சியில் பங்... மேலும் பார்க்க