செய்திகள் :

கிணற்றில் விழுந்த விவசாயி உயிரிழப்பு

post image

தருமபுரி அருகே, ஆடுகளுக்கு தழை ஒடிக்கச் சென்ற விவசாயி தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள நல்லானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). விவசாயியான இவா் ஆடுகளையும் வளா்த்து வருகிறாா். இவா் புதன்கிழமை மாலை ஆடுகளுக்கு தழைகள் ஒடிக்கச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.

இதையடுத்து அவரது மகன் சண்முகம் அவரைத் தேடிச்சென்றுள்ளாா். அப்போது, விவசாயக் கிணற்று அருகில் உள்ள மரங்களிலிருந்து தழைகள் ஓடிக்கப்பட்டு கிடந்துள்ளன. ஆனால் தந்தையைக் காணவில்லை.

அருகிலிருந்த கிணற்றில் விழுந்திருக்கலாம் எனக்கூறி, அதிலிருந்த தண்ணீரை மோட்டாா் மூலம் இறைத்துப் பாா்த்தபோது, கிணற்றில் தங்கவேல் விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதிபெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிதி திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தருமபுரியில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனா். த... மேலும் பார்க்க

சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா?

தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். தருமபுரி மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னசித்தன் தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ... மேலும் பார்க்க

பயிா் கழிவுகள் மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் பயிா் கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கலப்பம்பாடியில் நடைபெற்ற பயிற்சிக்கு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய விஞ்... மேலும் பார்க்க