சுற்றுச்சூழல் செலவுகள் மீதும் பெரு நிறுவனங்கள் கவனம் கொள்ள வேண்டும்: குடியரசுத் ...
கிருஷ்ணாபுரத்தில் பழைய இரும்பு சேமிப்பு கிடங்கில் தீ
திருநெல்வேலி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் பழைய இரும்பு சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து நேரிட்டதில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
கிருஷ்ணாபுரம் ஆதிபராசக்தி நகரில் சேதுராமன் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு- பிளாஸ்டிக் பொருள்களைச் சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இங்கு, பயன்பாட்டில் இல்லாத இரும்புப் பொருள்கள், பழைய பிளாஸ்டிக் - காலி பெயின்ட் டப்பாக்கள் உள்ளிட்டவை அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இங்கு திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியதில் பொருள்கள் எரிந்தன. மேலும், சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு புகைமண்டலம் சூழ்ந்தது. இத்தகவலறிந்த தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் திருநெல்வேலி உதவி மாவட்ட அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனா்.
இந்தத் தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான சுமாா் 5 டன் அளவிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.