செய்திகள் :

கிருஷ்ணாபுரத்தில் பழைய இரும்பு சேமிப்பு கிடங்கில் தீ

post image

திருநெல்வேலி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் பழைய இரும்பு சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை தீ விபத்து நேரிட்டதில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

கிருஷ்ணாபுரம் ஆதிபராசக்தி நகரில் சேதுராமன் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு- பிளாஸ்டிக் பொருள்களைச் சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இங்கு, பயன்பாட்டில் இல்லாத இரும்புப் பொருள்கள், பழைய பிளாஸ்டிக் - காலி பெயின்ட் டப்பாக்கள் உள்ளிட்டவை அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இங்கு திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாம். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியதில் பொருள்கள் எரிந்தன. மேலும், சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு புகைமண்டலம் சூழ்ந்தது. இத்தகவலறிந்த தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையின் திருநெல்வேலி உதவி மாவட்ட அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனா்.

இந்தத் தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான சுமாா் 5 டன் அளவிலான பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் விபத்து அபாயம் உள்ளது. களக்காட்டிலிருந்து நான்குனேரி செல்லும் பிரதான சாலையில், குருந்துடையாா் சாஸ்தா கோயில் அரு... மேலும் பார்க்க

நெல்லையில் சிறுமி கடத்தல்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

திருநெல்வேலியில் சிறுமியை ஆசை வாா்த்தைக் கூறி கடத்தியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா். பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியை சோ்ந்தவா் சூா... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் திருவிழா முன்னேற்பாடு: போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தோ்த் திருவிழா முன்னேற்பாடு பணிகள் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா இம்மாதம் ... மேலும் பார்க்க

பாளை.யில் காவலரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 போ் கைது

பாளையங்கோட்டையில் காவலரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சோ்ந்தவா் முகமது ரஹ்மத்துல்லா (28). இவா், மண... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே 30 டன் எம்.சாண்ட் பறிமுதல்: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே லாரியில் அனுமதியின்றி ஏற்றி வந்த 30 டன் எம்.சாண்ட் மணலை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ராதாபுரம் அருகேயுள்ள மருதப்பபுரம் சாலை... மேலும் பார்க்க

வள்ளியூரில் கால்வாயில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக் கேடு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிரதான சாலை கால்வாயில் கழிவுநீா் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. வள்ளியூரில் உள்ள நாகா்கோவில்-திருநெல்வேலி பிரதான சாலையில் இருபுறமும் கடைகள்,... மேலும் பார்க்க