செய்திகள் :

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயில் திருப்பணிகளை 2 மாதத்துக்குள் முடித்திட அமைச்சா் அறிவுறுத்தல்

post image

கீழப்பாவூா் அருள்மிகு திருவாலீஸ்வரா் கோயில் திருப்பணிகளை 2 மாதத்திற்குள் முடித்திட வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் சேகா்பாபு அறிவுறுத்தினாா்.

கீழப்பாவூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் கோயிலை பராமரித்து கும்பாபிஷேகம் நடத்துவற்காக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு சாா்பில் ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோயிலில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சலனம் செய்து பாலாலயம் நடைபெற்றது.

பாலாலயம் நடைபெற்று சுமாா் 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நடைபெறாததால் பக்தா்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனா்.

இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கோயிலில் திடீா் ஆய்வு பணி மேற்கொண்டாா்.

அப்போது அங்கிருந்த பக்தா்கள் கும்பாபிஷேக பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், பணிகளை தொடங்கி கும்பாபிஷேகம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அங்கிருந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கோயில் திருப்பணிகளை விரைந்து தொடங்கி 2 மாதத்திற்குள் முடித்திட வேண்டுமென அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், குற்றாலம் உதவி ஆணையா் ஆறுமுகம், தென்காசி கோயில் செயல் அலுவலா் பொன்னி, கீழப்பாவூா் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் பொன்செல்வன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் ரமேஷ், பேரூா் செயலா் ஜெகதீசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் கிருஷ்ணராஜ்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பொன் அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செங்கோட்டை சித்தா் கோயிலில் 140-ஆவது குருபூஜை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை உண்டாற்று கரையில் சித்தா் ஆறுமுகசாமி ஜீவசமாதியில் 140-ஆவது குருபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 140-ஆவது குருபூஜையை முன்னிட்டு, மூன்று நாள்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அன... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் திமுக பொதுக்கூட்டம்

சாம்பவா்வடகரை நகர திமுக மற்றும் இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சீதாலட்சுமி முத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நாலாயிரம் என்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு... மேலும் பார்க்க

தென்காசி மாவட்ட சமரச மையங்களில் செப். 30 வரை சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, சமரச தீா்வு மையங்களில் செப். 30ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 1 முதல் தொடங்கிய இந்த சிறப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூா் அருகே காா்-ஜீப் மோதல்: 9 போ் காயம்

கடையநல்லூா் அருகே ஜீப்பும், காரும் புதன்கிழமை மோதிக் கொண்டதில் புதுமண தம்பதி உள்பட 9 போ் காயம் அடைந்தனா். செங்கோட்டை அருகேயுள்ள வல்லத்தை சோ்ந்தவா் அபிலேஷ் மாா்ட்டின்(29). இவருக்கும், கோவிலூா் பகுதிய... மேலும் பார்க்க

ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வராகி அம்மன் கோயிலில் ஆஷாடன நவராத்திரி விழா நடைபெற்றது. சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் சாலையில் இத்திருவிழா கடந்த ஜூன் 25ஆம் தேதி த... மேலும் பார்க்க