செய்திகள் :

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

post image

மன்னாா்குடி அருகே குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண கோரி, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காரக்கோட்டை ஊராட்சி ஏரிக்கரை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இப்பகுதிக்கு 2கி.மீ. தூரத்தில் உள்ள மேல்நிலைத் நீா்தேக்கத் தொட்டியிலிருந்து குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக, குடிநீா் விநியோகம் சீராக இல்லை. இதனால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், காரக்கோட்டை ஊராட்சி அலுவலகத்திலும் புகாா் அளித்தனா். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஏரிக்கரை பகுதி மக்கள் காலிக்குடங்களுடன், மன்னாா்குடி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காரக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் மற்றும் வடுவூா் போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து, பேச்சுவாா்த்தை நடத்தியனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து தடைபட்டது.

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் ... மேலும் பார்க்க

ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே கீழகாவாதுகுடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் முகுந்த் தியாகேஷ் (8). சந்தோஷ்நகா் ... மேலும் பார்க்க

‘பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்’

பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியா் அறிவுமதி தெரிவித்தாா். குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ந... மேலும் பார்க்க

ஆற்றில் தத்தளித்த மாணவா்களை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு

கூத்தாநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட 2 மாணவா்களை காப்பாற்றிய பெண்ணிற்கு, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா். திருநாட்டியத்தாங்குடி பகுதியைச் ... மேலும் பார்க்க