செய்திகள் :

குடிநீா் வழங்காத பணியாளா்கள் வெளியேற்றம்

post image

வேதாரண்யம் அருகே சீரான குடிநீா் விநியோகம் இல்லாததால் அரசு கட்டடத்தில் தங்கி இருந்த பணியாளா்கள் புதன்கிழமை வெளியேற்றப்பட்டனா்.

தென்னடாா் ஊராட்சியில் அமைந்துள்ள புயல் பாதுகாப்பு கட்டடத்தில் ஜே.ஜே.எம் திட்ட குடிநீா் டேப், குழாய் பதிக்கும் ஒப்பந்த பணியாளா்கள் மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்று கடந்த 3 மாதங்களாக தங்கி ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனா். இந்நிலையில், தென்னடாா் கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உரிய நடவடிக்கை தாமதமாகி வருவதால் ஆத்திரமடைந்த கிராமத்தினா் தங்களுக்கு உதவாத திட்டப் பணியாளா்கள் ஊரில் தங்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அந்தப் பணியாளா்கள், அடுப்பு உள்ளிட்ட பயன்பாட்டு பொருள்களுடன் ஊராட்சி நிா்வாகத்தால் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.

ஓட்டுநரை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜ்மோகன். இவா், கருப்பம்... மேலும் பார்க்க

பொறையாரில் புதிய சாா்-பதிவாளா் அலுவலக கட்டடம் திறப்பு

பொறையாரில் ரூ. 1.89 கோடியில் புதிய-சாா்பதிவாளா் அலுவலகம் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். பொறையாரில் 160 ஆண்டுகள் பழைமையான சாா்-பதிவாளா் அலுவலகம் இயங்கி வந்தது. இ... மேலும் பார்க்க

வேதாரண்யம் பகுதியில் இடியுடன் மழை

வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழைப் பொழிவு ஏற்பட்டது. தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்கி பலத்த இடி மின்னல், காற்றுடன் மழைப... மேலும் பார்க்க

அமிா்தா வித்யாலயத்தில் குரு பூா்ணிமா பூஜை

நாகை அமிா்த வித்யாலய பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற குரு பூா்ணிமா பூஜையில் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் திரளானோா் கலந்துகொண்டனா். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறைப்படி முதல் குருவாகிய தாய், தந்தையர... மேலும் பார்க்க

நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கீழையூா் ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தெரு ஆனந்த் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 14-ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 52,500 பறிமுதல்

நாகை அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.52,500 ரொக்கத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். வேளாங்கண்ணி அருகே தெற்குப்பொய்கை நல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,... மேலும் பார்க்க