செய்திகள் :

குடிமைப் பணித் தோ்வுக்கு தயாராகி வந்த இளம்பெண் தற்கொலை

post image

மத்திய தில்லியின் ராஜேந்தா் நகா் பகுதியில் தங்கி மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணித்தோ்வுக்கு தயாராகி வந்த 20-வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

ராஜஸ்தானின் ஜெய்பூரைச் சோ்ந்த அந்தப் பெண், பழைய ராஜேந்தா் நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கி கடந்த இரு மாதங்களாகத் தோ்வுக்கு தயாராகி வந்தாா்.

அவருடைய பெற்றோா் கைப்பேசி மூலம் பல முறை அவரைத் தொடா்புகொண்டனா். இருப்பினும், அந்தப் பெண் அழைப்பை ஏற்காத நிலையில், அவா் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு பெற்றோா் அழைத்துள்ளனா்.

பின்னா், அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் மற்றொரு பெண்ணின் கைப்பேசிக்கு பேசிய வீட்டின் உரிமையாளா், அந்தப் பெண்ணிடம் சென்று தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்தப் பெண் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதன் பிறகு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணின் அறையிலிருந்து தற்கொலைக்கான குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தோ்வுக்கு தயாராகுவதில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் மனகவலையால் தற்கொலை செய்து கொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? சி.பி. ராதாகிருஷ்ணன் - சுதர்சன் ரெட்டி போட்டி

நமது சிறப்பு நிருபர்குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இண்டி' கூட்டணியும் பரஸ்பரம் தென் மாநிலங்களைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிவித... மேலும் பார்க்க

மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவரின் அதிகார பறிப்புக்கு ஒப்பாகும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

நமது நிருபர்மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட தீர்ப்பின் மூலம், குடியரசுத் தலைவரின் விருப்புரிமை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறி... மேலும் பார்க்க

தொடா்மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்: 8 போ் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோா் மீட்பு

மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடா்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 போ் உயிரிழந்தனா். மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க