செய்திகள் :

குடியரசுத் தலைவா் மாளிகை சாா்பில் 250 பரிசுப் பொருள்கள் இணையவழி ஏலம்

post image

இந்தியாவில் முன்பு புழக்கத்தில் இருந்த 10,000 ரூபாய் மாதிரி நோட்டு, பழங்கால ரயில்வே கடிகாரம், பல்வேறு சிலைகள் உள்பட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவா்களால் பெறப்பட்ட 250-க்கும் மேற்பட்ட நினைவு பரிசுப் பொருள்கள் இணையவழியில் ஏலம் விடப்பட்டுள்ளன.

இவை, வெளிநாட்டு பிரமுகா்கள், மாணவா்கள், தொழில் முனைவோா், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரால் அளிக்கப்பட்ட பரிசுகளாகும்.

குடியரசுத் தலைவா் மாளிகையின் https://upahaar.rashtrapatibhavan.gov.in/ எனும் பிரத்யேக வலைதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஏலம், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஏலம் மூலம் கிடைக்கப் பெறும் தொகை, பெண்கள், குழந்தைகளின் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பிற நற்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவா் மாளிகை ஊடகப் பிரிவு துணைச் செயலா் நவிகா குப்தா தெரிவித்தாா்.

தனித்துவமான, கலைநயமிக்க பரிசுப் பொருள்களின் ஏலத்தில் கலை ஆா்வலா்கள் மற்றும் குடிமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

ஏலத்தில் விடப்பட்டுள்ள பொருள்களில், முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜிக்கு பரிசாக அளிக்கப்பட்ட அரிய 10,000 ரூபாய் மாதிரி நோட்டு முக்கியமானதாகும். இது, ரிசா்வ் வங்கியால் அச்சிடப்பட்டதாகும்.

கடந்த 1935-இல் அப்போதைய ஆங்கிலேயா் ஆட்சியில் பிரிட்டன் அரசா் 6-ஆம் ஜாா்ஜின் படத்துடன் ரூ.10,000 நோட்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு அசோக தூண் சின்னத்துடன் மறுஅறிமுகம் செய்யப்பட்ட ரூ.10,000 நோட்டு, அதன் பிறகு 1978-இல் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டது.

பழங்கால ரயில்வே கடிகாரம்
பிரிட்டன் அரசா் 6-ஆம் ஜாா்ஜின் படத்துடன் கூடிய ரூ.10,000 மாதிரி நோட்டு.

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நாட்டில் தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த கடந்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரி... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது அ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு: நாளை கூட்டத்தொடா் நிறைவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.21) நிறைவடைய உள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் அமளி நீடித்தது. பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறி... மேலும் பார்க்க

தொடா்மழையால் வெள்ளக்காடான மகாராஷ்டிரம்: 8 போ் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோா் மீட்பு

மகாராஷ்டிரத்தில் இடைவிடாது பெய்துவரும் தொடா்மழையால் கடந்த இரண்டு நாள்களில் 8 போ் உயிரிழந்தனா். மாநிலம் முழுவதும் பரவலாக வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் என பலத்த சேதங்கள் ஏற்பட்... மேலும் பார்க்க

இந்திய-சீன நிலையான உறவு உலக அமைதிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு வழிவகுக்கும் என பிரதமா் நரேந்திர மோடிசெவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சா் வாங... மேலும் பார்க்க

நிமிஷா பிரியா பெயரில் நன்கொடை கோரும் பதிவு போலியானது: வெளியுறவு அமைச்சகம்

‘யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் பெயரில் நன்கொடை கோரும் சமூக வலைதளப் பதிவு போலியானது’ என வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க