செய்திகள் :

குன்னூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சட்டப் பேரவைத் தலைவா் வாகனம்!

post image

நீலகிரி மாவட்டம், உதகைக்கு சனிக்கிழமை மாலை வருகை தந்த தமிழக சட்டப் பேரவை தலைவா் அப்பாவு வாகனம் குன்னூா் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட காவல் துறை சாா்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் குன்னூா் மாா்க்கமாகவும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி மாா்க்கமாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

குன்னூா் லெவல் கிராஸ் மற்றும் காட்டேரி பகுதியில் சனிக்கிழமை அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காட்டேரி குன்னூா் இடையே இரண்டு கிலோ மீட்டருக்கும்மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு உதகைக்கு சனிக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தாா். அப்போது காட்டேரி குன்னூா் இடையே காந்திபுரம் பகுதியில் அவரது வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது காவல் துறையினா் அங்கும்இங்கும் ஓடி அவரின் வாகனம் செல்ல வழி ஏற்படுத்த முயற்சித்தனா்.

பின்னா் உதகையில் இருந்து வந்த ஹைவே பேட்ரோல் வாகனம் வழி ஏற்படுத்தி அவரது வாகனங்களை அழைத்து சென்றனா்.

உதகை தமிழக விருந்தினா் மாளிகையில் திங்கள்கிழமை வரை தங்கும் சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு நிகழ்ச்சி நிரல் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூா் வனச் சரகத்தில் ஆண் யானை உயிரிழந்தது குறித்த தகவல் வனப் பணிய... மேலும் பார்க்க

கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பிகள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே கட்டடப் பணிகள் மேற்கொள்ள இரும்புக் கம்பிகளை இறக்கியபோது கட்டடத் தொழிலாளி ஒருவரின் தலை மேல் கம்பிகள் விழுந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குன்ன... மேலும் பார்க்க

ஒற்றை யானை நடமாட்டம்: தொட்டபெட்டா காட்சி முனை மூடல்

ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா காட்சிமுனை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. யானையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

நீலகிரி மாவட்டம், முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் உதகை, தஞ்சாவூா் அம்மாபேட்டை ஆகிய பகுதியில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

5 பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது

குன்னூா் அருகே உள்ள பழங்குடியினா் கிராமத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை கடைவீதியில் திங்கள்கிழமை அதி... மேலும் பார்க்க